பக்கம் எண் :

264பால காண்டம்  

அதனால்  நீண்டிருக்கும்  கைகளை  உடையோய்!;  இனி நின் உழை
வந்தோர்  மாண்டவர்
- உன்னிடம் வந்தவர்கள் மாண்புடையவராவர்;
அல்லவர் மாண்பிலர் என்றான்
- அல்லாதவர்   மாட்சியில்லாதவரே
என்றான்.

ஆண்தகை:  வீரம் பொருந்தியவன் (இங்கு மாவலி). தனக்குத் தீங்கு
வருவது    கண்டும்   மேற்கொண்ட   செயலில்    ஊக்கமுடையவன்
என்பதைக் குறிக்கும். வேண்டினர்: வேண்டி வந்த  இரவலர். வேட்கை:
விருப்பம்.  நீண்ட கை: கொடையில் நிண்ட கை;  (தருகை நீண்ட கை).
‘நின்னுழை’ இதில் ‘உழை’ ஏழனுருபு. வீசுதல்: வழங்குதல்.

மாவலி   அவ்வாறு  கூற. வாமனன். வேண்டிவந்து கேட்பவர்களின்
விருப்பத்துக்கும்    மிகுதியாக    வழங்கும்  நீண்ட  கையுடையவனே!
உன்னிடம்   வந்ததடைந்தவர்கள்    மாண்புடையர்.   அல்லாதவர்கள்
மாண்பில்லார் என்று பாராட்டினான் என்பது கருத்து.             23
 

417.‘சிந்தை உவந்து எதிர். ‘’என் செய?’’ என்றான்;
அந்தணன். ‘’மூஅடி மண் அருள். உண்டேல்;
வெந் நிறலாய்! இது வேண்டும்’’ எனாமுன்.
‘’தந்தனென்’’ என்றனன்; வெள்ளி. தடுத்தான்;
 

சிந்தை   உவந்து  - (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து;
என்  செய என்றான்
-  மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும்
என்று  கேட்டான்;   அந்தணன்  - அதைக் கேட்ட வாமனனாக வந்த
திருமால்;  வெந்திறலாய்  -  கொடிய  வலிமை  வாய்ந்த  மாவலியே;
உண்டேல்  மூவடிமண் அருள் இது வேண்டும்
- உள்ளதாயின் என்
காலால்   மூன்றடி  மண்  தருவாயாக  இதுவே வேண்டும்; எனா முன்
தந்தனென்   என்றான்  
-  என்று  சொல்லுதற்கு  முன்பே  (மாவலி)
தந்தேன்  என்றான்; வெள்ளிதடுத்தான் - அப்போது அசுர குருவாகிய
சுக்கிரன் த்ராதே என்று தடுத்தான்.

சிந்தை:  மனம்.  உவந்து: மிக மகிழ்ந்து. உண்டேல்: உள்ளதாயின்
(என்றது  உற்சாகத்தின் பொருட்டு). வெந்திறல்: வெம்மையாகிய திறல்
(பண்புத்தொகை)  எனா:  செயா  என்ற  வாய்பாட்டு  வினையெச்சம்.
எனாமுன்:  என்று  கூறி  முடிப்பதற்கு முன்பே. தந்தனென்: தந்தேன்
விரைவு  பற்றி  வந்த  இறந்த  கால வினைமுற்று. தருவேன் என்பது
பொருள்.  வழு  அமைதி.  சுக்கிரன்  என்ற  வடமொழிப்  பெயரின்
தமிழாக்கம் வெள்ளி.                                      24
 

418.‘’கண்ட திறந்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும். மேல்நாள்.
உண்டவன்ஆம்; இது உணர்ந்துகொள்’’ என்றான்.
 

ஐய! இது கண்ட திறத்திது  கைதவம்- தலைவனாகிய மாவலியே!
ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம் கபடமானது;