பக்கம் எண் :

266பால காண்டம்  

420.

‘’துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்.
முன்னிய நல் நெறி நூலவர்; ‘முன்வந்து.
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க’
என்னின். இவன் துணை யாவர் உயர்ந்தார்?
 

நன்னெறி முன்னிய நூலவர்  - நல்ல நெறியினையே நினைந்துள்ள
நூலறிவு   வாய்ந்த  பெரியோர்கள்;  துன்னினர்  துன்னலர்  என்பது
சொல்லார்  
-  நெருங்கியவர். நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்;
உன்னிய  தானம்  
-   தாம்  செய்வதாக  நினைத்த தானப் பொருள்;
உயர்ந்தவர் முன்வந்து கொள்க
- உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க;
என்னின்  
-  என்று  சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும்
பலருள்ளும்; இவன்  துணை யாவர் உயர்ந்தார் - இந்த வாமனனுக்கு
இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு?

துன்னினர்:   நெருங்கியவர் அல்லது உறவினர். துன்னலர்: பகைவர்.
சொல்லார்:  சொல்லாதவராகி (முற்றெச்சம்). நூலவர்: நூலறிவு  வாய்ந்த
மேலோர். உன்னிய: நினைத்த. தானம்: கொடை. கொள்க:  வியங்கோள்
வினைமுற்று. துணை: ஒப்பு யாவர்: யார்.

நன்னெறி     கருதிய மேலோர் வேண்டியவர் வேண்டாதவர் என்ற
வேறுபாட்டை   எண்ணாது.   தாம்   செய்ய   நினைத்த   தானத்தை
உயர்ந்தோர்  கொள்க என்று சொல்லுவராயின். இந்த வாமனனை  விட
வேறு உயர்ந்தோர் எவருண்டு என்றான் மாவலி என்பது கருத்து.    27
 

421.‘’வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்.
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.
 

வெள்ளியை  ஆதல் விளம்பினை- நீ  வெள்ளறிவுடையனாதலின்.
உன்  இயற்கைக்கேற்ப   சொல்லினை;  மேலோர் - மேன்மைக் குணம்
உடைய   பெரியோர்கள்;   வள்ளியர்   ஆக   -  தாம்  வள்ளமை
உடையோராயின்;   இன்  உயிரேனும்  -  தமது  இனிய  உயிரையே
என்றாலும்;  வழங்குவர்  அல்லால் - கொள்வோர்க்குக் ?கொடுப்பாரே
அல்லாமல்; எள்ளுவ என்சில - சில கூறி பரிகசிப்பரோ?; கொள்ளுதல்
தீது  கொடுப்பது   நன்று   
-   பிறர்பால்   ஏற்றல்  தீமை  ஈதலே
நன்மையாகும்.

வெள்ளியை:   பெயருக்கேற்ப.      வெள்ளறிவுடையவன்   என்று
நயம்படக் கூறினார். வள்ளியர்: வள்ளன்மை  உடையோர். கொள்ளுதல்
தீது  கொடுப்பது  நன்று  ‘நல்லாறெனினும்’   கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும்  ஈதலே  நன்று’’  என்ற  திருக்குறள் கருத்து  அமைந்த
பாட்டிது. ‘எள்ளுவ என் இதில் ‘என்’