பக்கம் எண் :

  வேள்விப் படலம்269

உணவும்   இல்லாமல்;   விடுகின்றாய்   -   விடுகின்றாய்  என்பதை
அறிவாயாக.

‘’கொடுப்பது   அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் - உண்பதூஉம்
இன்றிக்  கெடும்’’  என்ற  குறளை  நினைந்து  பாடிய  செய்யுள்  இது.
ஈவது:  கொடுப்பது  ‘அழகிதோ’  இதில்  ஓகாரம்   எதிர்மறை வினாப்
பொருள்   தந்து   நின்றது.   தகவு:  தகைமை.   சுற்றம்:   இனத்தார்.
கொடுப்பதைத் தடுத்த வெள்ளியைத் தகவில் வெள்ளி என்றார்.     32
 

426.முடிய இம் மொழி எலாம்
   மொழிந்து. மந்திரி.
‘’கொடியன்’’ என்று உரைத்த சொல்
   ஒன்றும் கொண்டிலன்;
‘’அடி ஒரு மூன்றும். நீ.
   அளந்து கொள்க’’ என.
நெடியவன் குறிய கை
   நீரில் நீட்டினான்.

 

இம்மொழி  யெலாம் முடிய மொழிந்து  -  இத்தகைய   நீதிகளை
எல்லாம்   முற்றும்  எடுத்துச்  சொல்லி;  மந்திரி  கொடியன்  என்று
உரைத்த    சொல்   
-   அமைச்சனும்.   புரோகிதனுமான  சுக்கிரன்
வாமனனைக்     கொடியன்   என்று   கூறிய   சொற்களை;  ஒன்றும்
கொண்டிலன்  
-  ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி; நீ அடி ஒரு
மூன்றும்  
-  (வாமனனைப்  பார்த்து)   நீ   என்னைக்  கேட்ட அந்த
மூன்றடி அளவுள்ள நிலத்தை; அளந்து கொள்க என - உனது காலால்
அளந்து  கொள்க  என்று சொல்ல; நெடியவன் குறிய கை - திருமால்
தனது குறுங்கைகளை; நீரில் நீட்டினான் - மாபலி வார்த்த தான நீரில்
நீட்டினான்.

முடிய:  முடிவு  பெற.  ‘மொழி’   என்பது   சொல்வாகு  பெயராய்
நீதிமொழிகளை     உணர்த்தி    நின்றது.    சுக்கிரன்   ஆசிரியனும்
அமைச்சனுமாம்.   ‘ஒன்றும்’   இங்குச்  சிறிதும்  என்று பொருள் தந்து
நின்றது.   ‘ஒரு’   சிறுமை  குறித்த சொல்லாகும். நெடியவன்: திருமால்.
இங்குக்  குறளுருவான  வாமன வடிவத்திலேய - பின் எடுக்கப் போகும்
பேருருவம்    அடங்கியிருக்கிறது   என்பதை  உணர்த்த  ‘’நெடியவன்
குறியகை’’ என்றார் என்க.                                   33
 

427.கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

 

கயம் தரு நறும்  புனல்- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான
நீர்; கையில்  தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே;