பக்கம் எண் :

270பால காண்டம்  

பயந்தவர்களும்  இகழ் குறளன்  -   பெற்றவரும்    இகழும்படியான
குறுகிய  வடிவு  கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் -
எதிர்நின்று   பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள -
அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு  உதவிய  உதவி  ஒப்ப  -  அறிவு
ஒழுக்கங்களில்    சிறந்த    மேலோருக்குச்   செய்த   உதவி  சிறந்து
விளங்குவதுபோல;  விசும்பின்  ஓங்கினான்  - வானத்தின் அளவுக்கு
வளர்ந்து நின்றான்.  

கயம்:   குளம்.  நறும்புனல்:  தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி
வரைத்தன்று  உதவி  உதவி   செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற
குறட்கருத்துத்   தோன்ற.  உயர்ந்தவருக்கு   உதவிய  உதவி   சிறந்து
விளங்குவது போல. வாமன மூர்த்தி வானுற  ஓங்கி. வளர்ந்து  நின்றான்
என்பது  கருத்து.  பயந்தவர்: பெற்றோர்  (தாய். தந்தையர்).  வியத்தல்:
ஆச்சரியபடுதல் வெருக்கொள: அச்சமுற.                      34
   

428.‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி. அப்புறம்
சென்று பாவிற்றிலை. சிறிது பார் எனா;
ஒன்ற. வானகம் எலாம் ஒடுக்கி. உம்பரை
வென்ற கால் மீண்டது. வெளி பெறாமையே.

 
  

நின்ற கால்  - நிலத்தில் ஊன்றி நின்ற கால்; மண் எலாம் நிரப்பி
-  நிலத்தின்  பரப்பை  யெல்லாம்  மூடி; பார் சிறிது எனா - இப்பூமி
சிறிய  அளவுடைய  தென்று;  அப்புறம்   சென்று  பாவிற்றிலை  -
அப்புறம்  போய்ப்   பாவவில்லை; உம்பரை வென்ற  கால் - வானம்
சிறிதாகுமாறு மேலே  நீண்டு  உயர்ந்து  வென்ற  காலானது;  வானகம்
எலாம் ஒன்ற ஒடுக்கி  
-  வானத்தை  எல்லாம்  ஒருமிக்கச் சிறிதாகும்
படி  தனக்குள்  ஒடுக்கி;   வெளி   பெறாமையால்   மீண்டது   -
மேலும்   இடம் கிடைக்காமையால் மீண்டது.   

நின்ற:   ஊன்றிய.  நிரப்புதல்:  மூடுதல். பாவிற்றிலை: பாவவில்லை
‘’பார்   சிறிதெனா  அப்புறம்  சென்று  பாவிற்றிலை’’  என்றது.  பூமி
விரிந்தால்.  அதுவும் விரியும்  என்னும்  கருத்தை உள்ளடக்கி் நின்றது.
உம்பர்:  வானம். ஒடுக்கி: உள்ளடக்கி. வெளி: இடம். ஒன்ற: ஒரு  சேர.
எனா: (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்).                 35
   

429.‘உலகு எலாம் உள்ளடி
   அடக்கி. ஓர் அடிக்கு
அலகு இலாது. அவ் அடிக்கு.
   அன்பன் மெய்யதாம்.
இலை குலாம் துழாய் முடி
   ஏக நாயகன்.
-