பக்கம் எண் :

  வேள்விப் படலம்271

சிலை குலாம் தோளினாய்!
   சிறியன் சாலவே!
 

ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று-  ஊன்றிய  காலாகிய
ஒரு   அடி  உலகத்தை  எல்லாம்  பாதத்துள் அடக்கிவிட்டது;  அலகு
இலா  அவ்வடிக்கு  
- அளந்து கொள்ள இடமில்லாத அந்த  மூன்றாம்
அடிக்கு;  அன்பன்  மெய்  அது  ஆம்  - பக்தனாகிய மகாபலியின்
தலையே அளவடியாக  ஆயிற்று;  சிலைகுலாம்  தோளினாய் -  வில்
பொருந்திய  தோளினை  உடைய இராமா!; இலைகுலாம்  துழாய்முடி-
இலைகள்  மிகுந்த  துளப  மாலையை  அணிந்துள்ள;    ஏகநாயகன்-
உலகுக்கு  ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய;  சாலச் சிறியன்-
மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன்.   

இது  குளகம்.  அடுத்த  பாட்டுடன் பொருள் முடிவு பெறும். உலகு:
நிலம். உள்ளடி: அடியுள்  என்பது மொழிமாறி நின்றது. அலகு:  அளவு.
மெய்  அது  ஆம்:   மெய்யதாம்.  மாவலியின் உடம்பே அளவடியாக
ஆனது  என்பது  கருத்து.  ஏக நாயகன்: தனிப்பெருந்தலைவன். ஏகம்:
தனிமை.   ‘சாலச்சிறியன்’   திருமால்    கொண்ட  வாமன  வடிவைக்
குறித்ததாம்.   இச்சிறிய  வடிவமா   உலகத்தை   யெல்லாம்  ஓரடியுள்
அடக்கியது என வியந்து கூறியதுமாம். சால: மிக. ஏ: அசை.        36
   

430.‘’உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!

 
  

உரியது இந்திரற்கு இது என்று- இம்மூவுலகாட்சியும்  இந்திரனுக்கே
உரிமை   உடையது  என்று  கூறி;  ஈந்து  போய்  - அவற்றை அந்த
இந்திரனுக்கு  தந்து போய்; விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான்
- விரிந்த  அலைகளை  உடைய  பாற்கடல்  படுக்கையை அடைந்தான்;
உலகு   எலாம்   கடந்து  
-   மூவுலகத்தையும் அளந்த; கரியவன்
தாள்  இணை 
-  கருமை  நிறம்வாய்ந்த  அத்திருமாலின்  பாதங்கள்;
திருமகள் கரம்  தொட
- திருமகளான  இலக்குமி  தொட்டு வருடவே;
சிவந்து காட்டின
- செந்நிறம் கொண்டு விளங்கின.   

உரியது:   உரிமை உடையது. இந்திரன்: வானவர்க்கு அரசன். பள்ளி:
படுக்கை.  கரியவன்.  கருநிறம்  உடையவன்.   கரி:  சாட்சி. உலகுக்குச்
சாட்சி  யானவன்.  என்றும்  கூறுவர். தாளிணை:  இரண்டு   பாதங்கள்.
திருமகள்:  பெரிய  பிராட்டி.  கரம்: கை இவ்வாறு  மாவலி  வரலாற்றை
முனிவன் கூறினான்.                                        37