பக்கம் எண் :

272பால காண்டம்  

431.
 
  

‘ஆதலால். அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு.
ஈது அலாது இல்லை. வேறு இருக்கற்பாலதே.
 

அருவினை  அறுக்கும்  ஆரிய  -  உயிர்களைப் பற்றி  வருத்தும்
அரிய    வினைகளை   அழித்துக்  காக்கும்  மேலோனே!;  காதலால்
கண்டவர்   
-   (இந்தத்  தூய்மையான  இடத்தை)  காதல்   கொண்டு
காண்பவர்கள்;   பிறவி    காண்குறார்    -    பிறவி    நோயைக்
காணமாட்டார்கள்; ஆதலால். வேதநூல் முறைமையால் -  ஆதலாலே.
வேதநூல்களில் கூறியமுறைப்படி; வேள்வி முற்றுவேற்கு -  வேள்வியை
நடத்த   நினைத்திருக்கும்  எனக்கு;  இருக்கற்பாலது  -   வீற்றிருந்து
செய்யத்தக்க   இடம்;  ஈது  அலாது  வேறு  இல்லை  -  இவ்விடம்
அல்லாது வேறில்லை.  

ஈது   அலாது  வேறு  இல்லை.  இவ்விடம்  அல்லாது  வேறில்லை.
‘ஆதலால்  அருவினை  அறுக்கும்’ என்று  கொண்டு. திருமால் இருந்த
இடமாதலால்  தீவினைகளை  அழிக்கவல்லதிது   எனக் கூறினும்  ஆம்
‘அருவினை’   கடத்தற்கரிய  வினைகளாம்.   காதல்:  அன்பு   (பக்தி).
வேதநூல்:   வேதமும்  நூல்களும்  (உம்மைத்   தொகை).   முற்றுதல்:
நிறைவேறச்   செய்தல்.   முற்றுவேன்:    வினையாலணையும்   பெயர்.
இருக்கல்:  இருத்தல்.  பால்:  தன்மை.  ஏ:   அசை.  வேள்வி:  யாகம்.
வேள்வி  செய்ய  ஏற்ற  இடமிதுவே என  முனிவன்  கூறினானென்பது
கருத்து.
   

432.‘ஈண்டு இருந்து இயற்றுவென்
   யாகம். யான்’ எனா.
நீண்ட பூம் பழுவத்து
   நெறியின் எய்தி. பின்
வேண்டுவ கொண்டு. தன்
   வேள்வி மேவினான்.
காண்தகு குமரரைக்
   காவல் ஏவியே.

 
  

ஈண்டு  இருந்து   இயற்றுவன்   யாகம்   யான்   எனா    -
இவ்விடத்திலிருந்து   நான்   வேள்வியைச்  செய்வேன்  என்று; நீண்ட
பூம்பழுவத்து  
- நீண்ட. மலர்  நிறைந்த அச்சோலையிடத்து; நெறியின்
எய்தி  
-  முறையாகச்  சென்று;  பின்  வேண்டுவ  கொண்டு - பின்
வேள்விக்குரியன  சேகரித்துக்கொண்டு;   காண்   தகு   குமரரை  -
அழகுடைய   அரசிளங்குமரர்களாகிய   இராம  இலக்குவர்களை. காவல்
ஏவி  .  காவல் புரியுமாறு கட்டளையிட்டு; தன் வேள்வி மேவினான் -
தனது வேள்வியைத் தொடங்கினான்.