பக்கம் எண் :

  அகலிகைப் படலம்295

அகலிகை   நல்லுருவம் பெறல்: திருமாலின்திருவடி  சேர்பவர்  தம்
கருமம்  ஒழிந்து  இப்  புன்மையான  உடம்பை  ஒழித்து    ஒளிமிக்க
உருவத்தை   அடைவதுபோல.  இராமனது  திருவடிப்பொடி   சேர்ந்த
அளவில்   இவளது   சாபம்   நீங்கியது.  தனது  கல்லுருவம்   மாறி
முன்னைய  நல்லுருவத்தைப் பெற்றாள். பேதைமை  மயக்கு:  அவிச்சை
(அஞ்ஞான)   யின்   தொடர்ச்சி.  மெய்யுணர்தல்:   பிறப்பு.   இறப்பு.
வீடுகளையும்  அவற்றின்  காரணங்களையும்   விபரீத  ஐயங்கள் நீங்கி
உண்மையாக   அறிதல்.   முக்தி   பெறுவார்நிலை:   நிலம்  முதலான
ஐம்பூதங்களாலான   இந்தக்  கரும  வினையுடலை   நீக்கி.  ஒளிமிக்க
தெய்வீக  உடம்பைப்  பெறுதல்  வான்மீகம்  - மிதிலைக்கு   அருகில்
செல்லும்  போது  ஆச்சிரமம்  ஒன்று  பாழடைந்து கிடப்பது  குறித்து
இராமன்  விசுவாமித்திரனைக் கேட்டான். அப்பொழுது அம்  முனிவன்
அகலிகையின்   வரலாறு   கூறி.   அந்த   ஆச்சிரமம்   செல்லுமாறு
வேண்டுகிறான்.  இராமனும் சாப விமோசனம் உண்டாகுமென்று  கருதி
அங்கே சென்றான்.                                        14

              அகலிகை வரலாற்றை இராமன் முனிவனிடம் கேட்டல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்
   

466.‘மாஇரு விசும்பின் கங்கை
   மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு
   மின் என ஒதுங்கி நின்றாள்.
தீவினை நயந்து செய்த
   தேவர்கோன்தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி;
   அகலிகை ஆகும்’ என்றான்.

 
  

மா  இரு விசும்பின்  -  மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை
மண்மிசை
-  கங்கா  நதியை இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த -
கொண்டு   வந்த   பகீரதன்  என்னும்  பேரரசன்  (குலத்தில்  பிறந்த)
மைந்தனே!;  மேயின  உவகையோடு  -  பொருந்தின மகிழ்ச்சியோடு;
மின்னென  
- மின்னல்கொடிபோல; ஒதுங்கி நின்றாள் - ஒருபக்கத்தே
(நாணத்தால்)    ஒதுங்கி  நின்ற  இவள்;  தீவினை  -  (மற்றொருவன்
மனைவியைச்   சேர்தலாகிய)  கொடுந்தொழிலை;  நயந்து  செய்த  -
விரும்பிச்  செய்த;  தேவர்கோன்  தனக்கு - தேவர்கள் தலைவனான
இந்திரனுக்கு;  செங்கண்  ஆயிரம்  -  சிவந்த  ஆயிரம்  கண்களை;
அளித்தோன்   பன்னி   
-   கொடுத்த   கௌதம   முனிவனுடைய
பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான்.  

அகலிகை:   தன்   சிலை  வடிவம்  நீங்கி  பெண்வடிவு  பெற்று
மகிழ்ச்சியோடு  நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே. கௌதம முனிவனின்
மனைவியான    அகலிகையாவாள்   இந்திரன்   ஆயிரம்   கண்கள்
பெற்றமை:    இந்திரன்    மாற்றான்   மனைவியைச்   சேர்தலாகிய
கொடுஞ்செயலை விரும்பிச் செய்ய அதன்