வேண்டுமோ - (என்னைக் கொல்லக் கருதுகின்ற கூற்றுவனுக்கு இத்தனை கருவிகளும் வேண்டுமோ) |
சீதையின் அல்குல். கண். முலை. நகை என்ற இவற்றுள் ஒவ்வொன்றும் என்னை வருத்துகின்றன. ஆனால். இவற்றுள் ஒன்றே என்னை வருத்தப் போதுமே! என்பது கருத்து. ‘பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன். பெண்தகையால் பேரமர்க் கட்டு’ - குறள் 1083.தேர் - உவமையாகு பெயர். 144 |
624. | ‘கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன். பொன்னை முன்னிய பூங் கணை மாரியால். என்னை எய்து தொலைக்கும் என்றால். இனி. வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே? |
கன்னல் வார்சிலை - கரும்பாகிய நீண்ட வில்லை; கால் வளைத்தே - வளைத்து; மதன் - மன்மதன்; பொன்னை முன்னிய - திருமகள் போன்ற சீதையை நினைக்கும் பொருட்டு; பூங் கணை மாரியால் எய்து - (என்மேல்) தொடுக்கும் மலரம்பு மழையால் எய்து; என்னை - (யார்க்கும் வலி தொலையாத) என்னை; தொலைக்கும் என்றால் - வலியழிப்பான் என்றால்; இனி - இனிமேல்; வன்மை என்னும் இது - வலிமை என்று சொல்லப்படுகின்ற குணம்; யாரிடை வைகும் - யாரிடத்திலே தங்கியிருக்கும். முன்னிய - செய்யிய என்னும் வினையெச்சம். இதுவரை வலிய வில்லம்புகளோடு கட்டமைந்த உடம்புமுடைய வீரர் யார்க்கும் வலி தொலையாத நான் இப்பொழுது மெல்லிய கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் உடைய மன்மதனிடம் வலிமை இழக்கும்படி ஆயிற்றே என்று இராமன் வருந்தினான். 145 |
625. | ‘கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல் பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா. உள்ள உள்ள உயிரைத் துருவிட. வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? |
கொள்ளை கொள்ள - (உலக முழுவதையும்) கொள்ளை கொள்வதற்கு; கொதித்து எழு - பொங்கி எழுகின்ற; பாற்கடல் பள்ளம் - ஆழமான பாற்கடலினது; வெள்ளம் என - வெள்ளம் போல; படரும் நிலா - பரவியுள்ள நிலாவானது; உள்ள உள்ள - நான் (அந்த நங்கையை) நினைப்பதனால் தரித்துள்ள; உயிரை - என் உயிரை; துருவிட - அரிப்பதால்; வெள்ளை வண்ணம் - வெண்மை நிறமுள்ள; விடமும் - ஒரு நஞ்சும்; உண்டாம் கொல் - லகில் உள்ளதோ? |
கொள்ளை கொள்ளுதல்: ஒருங்கே கவர்ந்து தன்வசமாக்குதல். நஞ்சு கரிய நிறமுடையது என்று கூறுவது மரபு. ஆனால். நிலா என்னும் வெள்ளை |