பக்கம் எண் :

410பால காண்டம்  

களின்     குலப் பெருமையை)  சொல்வது  கடினம்  என்றால்;  யான்
இன்று    
-    (ஒரு    முகமும்   ஒரு   நாவும்   உடைய)   நான்
தளர்ச்சியடையாமல்  இப்பொழுது;  புகழ்ந்து உரைத்தற்கு - புகழ்ந்து
சொல்வதற்கு; எளிதோ  -  எளிதாகுமோ?  (ஆகாது); ஏடு அவிழ் -
இதழ் விரியும்; கொன்றைப் பூ நின்ற - கொன்றை மலர்களைச் சூடிய;
மவுலியையும்  
-  திருமுடியில்; புக்கு அளைந்த - வந்து பொருந்திய;
புனல்
- புனித நீரையுடைய; கங்கை - கங்கை நதியை; வான் நின்று-
வானுலகத்திலிருந்து;  கொணர்ந்தானும் - (இப் பூவுலகிற்குக்) கொண்டு
வந்தவனும்;  இவர் குலத்து - இச் சிறுவர்களது குலத்தில் பிறந்த; ஒர்
மன்னவன் காண்
- (பகீரதன் என்னும்) ஓர் அரசனே ஆவான்.     9

மவுலியையும் - உயர்வு சிறப்பும்மை.
 

646.

‘கயற் கடல் சூல் உலகு எல்லாம்
   கைந் நெல்லிக் கனி ஆக்கி.
இயற்கை நெறி முறையாலே
   இந்திரற்கும் இடர் இயற்றி.-
முயற் கறை இல்மதிக் குடையாய்!-
   இவர் குலத்தோன் முன் ஒருவன்.
செயற்கு அரிய பெரு வேள்வி
   ஒரு நூறும் செய்து அமைத்தான்.

 

முயல் கறை இல் - முயலாகிய களங்கம் இல்லாத; மதிக்குடையாய்
-  சந்திரனைப்  போல விளங்கும்  வெண்கொற்றக் குடையுடையவனே!;
இவர் குலத்தோன்
- இம் மைந்தர்களது குலத்திலே; முன்னொருவன்-
முன்புதோன்றினான்  ஓர் அரசன்; கயல் கடல் சூழ் உலகு எல்லாம்-
மீன்கள்  வாழும்  கடலால்  சூழப்பட்டுள்ள நிலவுலகம்  முழுவதையும்;
கைந்  நெல்லிக்  கனி  
- உள்ளங்கையிலுள்ள  நெல்லிக்  கனிபோல;
ஆக்கி  
- எளிதாக  தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து; இந்திரற்கும் -
தேவேந்திரனுக்கும்;  இடர் இயற்றி - (பதவி இழத்தலாகிய) துன்பத்தை
யுண்டாக்கி;  செயற்கு  அரிய -(பிறரால்)  செய்வதற்கு  அருமையான;
பெருவேள்வி     ஒருநூறும்     -   
ஒப்பற்ற    பெரிய    நூறு
அசுவமேதயாகங்களையும்;  இயற்கை  நெறிமுறையால் - வேதங்களின்
விதி   முறைமை   வழுவாமல்;   செய்து   அமைத்தான்  - செய்து
முடித்தான்.

இப்     பாடலில்   குறிக்கப் பெற்றவன் சுதாசன் என்பவர். நகுடன்
என்று    குறிப்பாரும்      உண்டு.   சந்திரனிடமுள்ள   களங்கத்தை
முயலென்றும்.  மான்  என்றும்  பூச்     சாயை  என்றும். மறு என்றும்
கூறுவது கவிமரபாகும்.                                       10