பக்கம் எண் :

  கார்முகப் படலம்445

பாம மா கடல்கள் எல்லாம்
   பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனிக் கணங்கள் எல்லாம்
   கூறின ஆசி; - ‘கொற்ற
நாம வேல் சனகற்கு. இன்று.
   நல்வினை பயந்தது’ என்னா.
 

கொற்றம்     - வெற்றியையும்;  நாமவேல் - (பகைவர்க்கு) அச்சந்
தரும் வேற்படையையும் உடைய; சனகற்கு - சனகமன்னனுக்கு;  இன்று
- இன்றுதான்; நல்வினை - முற்பிறப்பில் செய்த நல்வினை; பயந்தது -
பயனை  அளித்தது;  என்னா  -  என்று  எண்ணி;  விண்ணோர்  -
(அதனால்)    தேவர்கள்;    பூமழை   சொரிந்தார்   -  மலர்மழை
பொழிந்தார்கள்;  மேகம்  -  வானமானது; பொன்மழை - பொன்மாரி;
பொழிந்தது
- பொழிந்தது; பாம மா கடல்கள் எல்லாம் - பரந்துள்ள
கடல்கள்  யாவும்;  பல்மணி  தூவி  -  பலவகை  மணிகளைச் சிதறி;
ஆர்த்த  
-  ஆரவாரித்தன;  கோமுனிக் கணங்கள் - சிறந்த முனிவர்
கூட்டங்கள்;  எல்லாம்  ஆசி கூறின - யாவும் வாழ்த்து மொழிகளைக்
கூறின.

பாமம்     - பரப்பு; ஒளி என்ற பொருளும் உண்டு.  வில்லொடித்த
ஓசை   கேட்டு   முதலில்    துணுக்குற்றாராயினும்  பின்னர்  இராமன்
சிவதனுசை   முறித்த  ஓசையே  என    அறிந்து  பூமழை  பொழிதல்
முதலியவற்றைச் செய்தனர் என்பது.                            36
 
  

702.மாலையும். இழையும். சாந்தும்.
   சுண்ணமும். வாச நெய்யும்.
வேலை வெண் முத்தும். பொன்னும்
   காசும். நுண் துகிலும். வீசி.
பால் வளை. வயிர்கள். ஆர்ப்ப;
   பல் இயம் துவைப்ப; முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன.
   ஒலி நகர் கிளர்ந்தது அன்றே!

 
  

நகர்   - அந்த மிதிலை மாநகர்; பால்வளை - வெண் சங்குகளும்;
வயிர்கள் ஆர்ப்ப
- ஊது கொம்புகளும் முழங்க; பல் இயம் துவைப்ப
-     பலவகை     வாத்தியங்களும்   ஒலிக்க;    மாலையும்    -
மலர்மாலைகளையும்;  இழையும்  -  அணிகலன்களையும்; சாந்தும் -
சந்தனக்  குழம்பையும்;  சுண்ணமும்  -  நறுமணப்  பொடியும்; வாச
நெய்யும்  
-  மணமுள்ள  தைலவகையும்;  வேலை வெண்முத்தும் -
கடலின்  வெண்  முத்தையும்;  பொன்னும் - பொன்னையும்; காசும் -
இரத்தினங்களையும்; நுண்துகிலும் - மெல்லிய ஆடைகளையும்; வீசி