பக்கம் எண் :

446பால காண்டம்  

-     (ஒருவர்க்கொருவர்)  வழங்கி;  உவா    உற்று  -  பருவகாலம்
வந்ததால்; முந்நீர் ஓல்  - கடல் ஆரவாரத்தால்;  கிளர்ந்து என்ன -
கிளர்ந்தது போல; ஒலி கிளர்ந்தது - ஒலி மிகுதி யாயிற்று.

இராமன்     வில்லை முறித்தமையால் இனிச் சீதையின்   திருமணம்
நடைபெறப்  போகின்றது   என்ற   மகிழ்ச்சியால்  மிதிலை  நகரத்தவர்
மாலை   முதலியவற்றை   வீசிப்   பேராரவாரம்   செய்தனர்  என்பது.
பௌர்ணமி நாளில் கடல் பொங்கி ஒலித்தல் வில்   முறிபட்ட தினத்தில்
நகரின் முழக்கத்துக்கு உவமையாகும். ஓல் - ஓலம் - கடைக்குறை.   37
   

703.நல் இயல் மகர வீணைத்
   தேன் உக. நகையும் தோடும்
வில் இட. வாளும் வீச.
   வேல் கிடந்தனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன
   முகத்தியர். எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும்
   தோகையின் ஆடினாரே!

 
  

வேல்  கிடந்து அனைய- வேல் தங்கியது போன்ற; நாட்டத்து -
கண்களையும்;  எல்லியல்  மதியம் அன்ன - இரவில் எழும் சந்திரன்
போன்ற; முகத்தியர் - முகத்தையும் உடைய மங்கையர்கள்; சொல்லிய
பருவம்  
-  (மேகம் வரக்கூடிய) கார்ப் பருவத்தில்; எழிலி தோன்ற -
(வானத்தில்   மேகங்கள்   காணப்பட;   தோகையின்   -  மயில்கள்
ஆடுவதுபோல;  நல் இயல் - நல்லிலக்கணம் அமைந்த; மகரவீணைத்
தேன் உக
- மகரயாழின் இசைத் தேன் சிந்தவும்; நகையும் தோடும் -
புன்சிரிப்பும்  காதணியும்;  வில் இட வாள் வீசு - முறையே ஒளியைப்
பரப்பிவிடவும்; ஆடினர் - ஆடினார்கள்.

பற்களின்     ஒளி  விடாது  தோன்றுவதால்   ‘வில்இட’  என்றும்.
காதணிகள்  விட்டுவிட்டு ஒளிவிடுவதால்  ‘வாள்வீச’  என்றும் இவற்றால்
வில்லையும்  வாளையும்  வீசிக்கொண்டு  மகளிர்   ஆடினர்   என்பது
நயம்.                                                    38
   

704.உண் நறவு அருந்தினாரின்
   சிவந்து ஒளிர் கருங் கண் மாதர்.
புண் உறு புலவி நீங்க.
   கொழுநரைப் புல்லிக்கொண்டார்;
வெண் நிற மேகம் மேன்மேல்
   விரி கடல் பருகுமாபோல்.