பக்கம் எண் :

  கார்முகப் படலம்447

மண் உறை வேந்தன் செல்வம்.
   வறியவர் முகந்துகொண்டார்.

 

உண்   நறவு அருந்தினாரின்- (அறிவைக் கெடுக்கின்ற) கள்ளைக்
குடித்தவர்போல;   சிவந்து  ஒளிர்   கருங்கண்  -  செந்நிறத்துடன்
விளங்கும்  கரிய  கண்களையுடைய;  மாதர்  -  பெண்கள்; புண் உறு
புலவி நீங்க
- கணவர் மனத்தைப் புண்படச்செய்யும் ஊடல் நீங்குமாறு;
கொழுநரைப் புல்லிக்   கொண்டார்   
-  தம்  கணவரைத்  தழுவிக்
கொண்டார்கள்;  மேன்மேல்  விரிகடல்  -  அலைகள்  மேன்மேலும்
பரவும்  கடலில்;  வெண்ணிற  மேகம் - வெண் மேகங்கள்; பருகுமா
போல்
-  (நீரைப்) பருகுவது போல; மண்உறை வேந்தன் செல்வம் -
நிரம்பப்பெற்ற  சனகனுடைய  செல்வத்தை;  வறியவர் - வறியவர்கள்;
முகந்து கொண்டார்
- (வேண்டியபடி) வாரிக் கொண்டு சென்றார்கள்.

வில்லிறுத்த     ஓசை செவிப்பட்டதால் சீதையின் திருமணம் நிகழப்
போகின்றதென்ற  மகிழ்ச்சியால்  ஊடல்கொண்ட மகளிரும்   அப்புலவி
நீங்கித்  தம்  கணவரைத்  தழுவிக்  கொண்டனர்  என்பது.   உட்புறம்
முழுவதும்   சிவந்து   இமைப்பக்கம்   கறுத்திருந்த    கண்ணென்பார்
‘சிவந்தொளிர் கருங்கண் மாதர்’ என்றார். மகளிர்க்குப்   புலவியால் கண்
சிவத்தல் இயல்பு.                                           39
   

705.வயிரியர் மதுர கீதம்.
   மங்கையர் அமுத கீதம்.
செயிரியர் மகர யாழின்
   தேம் பிழி தெய்வ கீதம்.
பயிர் கிளை வேயின் கீதம்.
   என்று இவை பருகி. விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம்
   ஓவியம் ஒப்ப நின்றார்.
 

வயிரியர்   - கூத்தர்களின்; மதுர கீதம் - இனிய   பாடல்களும்;
மங்கையர்  அமுதகீதம்
- மகளிரின் அமுதப் பாடல்களும்; செயிரியர்
-  யாழினை  மீட்டும்  பாணர்; மகரயாழின் தேன்பிழி - மகரயாழிலே
தோன்றும்   தேன்  பிழிந்தாற்  போன்ற;  தெய்வ  கீதம்  -  பாடும்
தெய்வத்தன்மையுள்ள  பாடல்களும்;  வேயின்  பயிர்கிளை- புல்லாங்
குழலிலிருந்து   ஏழிசை  அடிப்படையில் தோன்றும் பல்வேறு ராகங்கள்;
கீதம்
- ஒலிக்கவும்; என்ற இவை - என்ற இவற்றை; பருகி - செவியிற்
கேட்டு; விண்ணோர் - தேவர்கள்; உயிர்உடை - உயிருள்ள; உடம்பு
எல்லாமும்
-  உடல்  எல்லாம்; ஓவியம்  ஒப்ப நின்றார் - சித்திரம்
போல (அசைவற்று) நின்றார்கள்.