பக்கம் எண் :

  கார்முகப் படலம்449

(அந்நகர    மக்களில் சிலர்); தயரதன் புதல்வன்  என்பார் - (இவன்)
தயரதன்  திருமகன் என்று கூறுவார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்
-   (சிலர்  இவன்)  செந்தாமரைக்  கண்ணனான  திருமாலே    என்று
சொல்வார்கள்;  இவன்  மேனி  -  (சிலர்)  இவனது மேனியின் நிறம்;
புயல்  என்பார்  
- கருமேகம்  என்பார்கள்;  பூவையும் பொருவும் -
(தவிர) காயாம் பூவையும் ஒத்துள்ளது; என்பார் - என்பார்கள்   (சிலர்);
மானிடன்  அல்லன்  
-  (எவ்வாறாயினும் இவன்) மானுடன்  அல்லன்;
என்பார்
-  என்று   கூறுவார்கள்  (சிலர்);  கயல்  பொரு  கடலுள்-
(பின்னை  இவன்  யாரென்றால்)  கயல்மீன்களையுடைய    பாற்கடலில்;
வைகும் கடவுளே
- தங்கியுள்ள திருமாலே ஆவான்; என்பர் - என்று
சொல்வார்கள்;  மயல்  உடைத்து உலகம் - இந்த உலகத்தின் இயல்பு
மயக்கம்  உடையது;  என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்) (இவ்வாறு
மக்கள் பலபடி கூறினர்).

பூவையும் - இறந்தது தழீஇய எச்ச உம்மை.                   42
   

708.‘நம்பியைக் காண நங்கைக்கு
   ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும்தோறும்.
   குரிசிற்கும் அன்னதே ஆம்;
தம்பியைக் காண்மின்!’ என்பார்;
   ‘தவம் உடைத்து உலகம்’ என்பார்;
‘இம்பர். இந் நகரில் தந்த
   முனிவனை இறைஞ்சும்’ என்பார்.

 
  

நம்பியைக்    காண- (மற்றும் சிலர்)   இராமனது   வடிவழகைக்
காண்பதற்கு;  நங்கைக்கு  ஆயிரம்  நயனம் -  சீதைக்குக்  கண்கள்
ஆயிரம்;  வேண்டும் -  வேண்டும் (என்று கூறுவார்); கொம்பினை -
பூங்கொம்பு   போன்ற   இவளை   (சீதையை);   காணும்தோறும்  -
பார்க்கும்தோறும்  (புதிய  புதிய  வடிவழகே புலப்படுவதால்);   குரிசிற்
கும்  
-  இப்   பெருமானாகிய  இராமனுக்கும்; அன்னதே - (ஆயிரம்
கண்கள்  வேண்டும் என்பது)  அத்தன்மையதே; தம்பியைக் காண்மின்
-  (தமையன்  இருக்கட்டும்)  அவன் தம்பியான  இவன்   வடிவழகைப்
பாருங்கள்; என்பார்  - என்று சொல்வார்; உலகம் தவம் உடைத்து -
(இப்படிப்பட்ட  அழகுள்ளவர்களைப்  பெற்றதால்)  இந்த    நிலவுலகம்
தவம்  செய்ததாயிற்று;  என்பார் - என்று சொல்லுவர் (சிலர்);  இம்பர்
இந்நகரில்  
- (மற்றும் சிலர்) உள்ள இந்த  உலகத்தில் மிதிலை நகரில்;
தந்த  முனிவனை
- இம் மைந்தர்களை அழைத்துவந்த  விசுவாமித்திர
முனிவனை;   இறைஞ்சும்  என்பார்  -  (எல்லாரும்)  வணங்குங்கள்
என்றுசொல்வார்கள்.