பக்கம் எண் :

  கார்முகப் படலம்451

காசு இல் தாமரையின் பொய்கை.
   சந்திர காந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ்
   சேக்கையை அரிதின் சேர்ந்தாள்.

 

ஊசல்   ஆடு- (சீதை) ஊஞ்சல் போலப் போவதும் வருவதுமான;
உயிரினோடும்
-  உயிருடன்; உருகு பூம்பள்ளி  நீங்கி  -  உடம்பு
உருகுவதற்குக் காரணமான மலர்ப் படுக்கையை விட்டு நீங்கி; பாசிழை
மகளிர்  
-  பசும்பொன்  அணிகள்  பூண்ட  மகளிர்; சூழப் போய் -
சூழ்ந்து  வர (அவ்விடத்தை விட்டுப்) போய்; காசு இல் தாமரையின் -
குற்றமற்ற  தாமரைத்;  பொய்கை  -  தடாகத்தின் கரையிலுள்ள; ஒரு
பளிங்குமாடம்  
-   பளிங்கு   மாடத்தில்;  சந்திரகாந்தம்  ஈன்ற -
சந்திரகாந்தக்  கற்கள்  வெளிப்படுத்துவதும்;  சீதம்  நீர்  தெளித்த -
குளிர்ந்துள்ளதுமான   நீர்   தெளித்த;   மென்பூஞ்  சேக்கையை  -
மென்மையான  பூம்படுக்கையை;  அரிதின்  சேர்ந்தாள்  - அரிதிலே
சேர்ந்தாள்.

சீதை     முன்னிருந்த மலர்ப் படுக்கையை   விட்டுத்    தாமரைத்
தடாகத்தின்   கரையிலிருக்கும்  பளிங்கு    மாடத்தில்  அமைத்துள்ள.
சந்திரகாந்தக்  கற்கள்  வெளிக்கக்கும்  குளிர்ந்த   நீர் தெளித்த மலர்ப்
படுக்கையில்   சிரமப்பட்டுச்     சேர்ந்தாள்   என்றார்.  சந்திரகாந்தம்:
நிலவைக்  கண்ட  இடத்து  நீரைக்    கக்குவதொரு  கல்  தாமரையின்
பொய்கைப் பளிக்குமாடம் என இயைபுடுத்தவேண்டும்.             45
   

711.“பெண் இவண் உற்றது” என்னும்
   பெருமையால். அருமையான
வண்ணமும் இலைகளாலே
   காட்டலால். வாட்டம் தீர்ந்தேன்;-
தண் நறுங் கமலங்காள்! - என்
   தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர்; என்
   உயிர் தர உலோவினீரே!
 
  

தண்   நறுங்   கமலங்காள்- குளிர்ந்த நறுமணமுள்ள தாமரைக்
கொடிகளே!;  பெண்  - ஒரு பெண்ணிற்கு; இவண் - இப்போது இந்த
இடத்தில்;  உற்றது - (பிரிவுத் துயர்) நேர்ந்துள்ளது; என்றும் - என்று
கருதுகின்ற;    பெருமையால்    -    பெருந்தன்மை    உங்களுக்கு
உண்டானதால்;    அருமையான    வண்ணமும்  -   (அப்பிரானது
காண்பதற்கு அரிய) திருமேனி நிறத்தையும்;  இலைகளாலே - (உங்கள்)
இலைகள் மூலம்; காட்டலால் - காட்டுவதால்; வாட்டம் தீர்ந்தேன் -
மனவாட்டம்  நீங்கப்  பெற்றேன்  (அல்லாமலும்); நீர் - நீங்கள்; என்
தளிர்  நிறம்  உண்ட  
-  எனது  தளிர் போன்ற நிறத்தைக் கவர்ந்த;
கண்ணினுள்  
-  அவருடைய  கண்களிலுள்ள;  நிறம் - நிறத்தையும்;
காட்டி