பக்கம் எண் :

452பால காண்டம்  

னீர்     - (மலர்களைக்   கொண்டு)   காட்டினீர்   (அவ்வாறு காணச்
செய்தும்);  என்  உயிர் தர - எனது உயிராகிய  அவரைத் தருவதற்கு;
உலாவினீரே
- பின்வாங்கினீரே (இதற்கு என்ன காரணம்).

இராமனது    நிறத்தையும் கண்களையும் தாமரை காட்டி  நின்றதைப்
புகழ்ந்து   அந்த   இராமனைத்   தன்    முன்னே   கொண்டு  வரத்
தவறியதனால் பழித்தாள் சீதை என்றார்.  உயிர்:  இராமனைக் குறிக்கும்;
சீதையின்  உயிரும்   ஆகும்.   தான்  அழகழிந்து  உடல்  முழுவதும்
பகலைப்   போர்க்கும்படி   தன்     மனத்தை   அவன்   கண்ணழகு
கவர்ந்ததால்   ‘தளிர்   நிறமுண்ட   கண்’  என்பது.   வண்ணமும்  -
எச்சவும்மை.  உலோவுதல்  -  உலோப  குணங்  கொள்ளுதல்;   கடும்
பற்றுள்ளம்   கொள்ளுதல்.    சீதை.    தாமரைகளே!  என்  உயிரான
காதலனுடைய  உடலின்  நிறமும்  கண் நிறமும்  காட்டினீர்.  ஆதலால்
அந்த  உயிர்  உம்மிடமே  உள்ளது.   அதனைக்   கொடுக்கவேண்டும்
என்று  உங்களை  இரக்கின்றேன்.  ஆனால்.  இவ்வாறு  கொடுக்காமல்
உலோபம்  செய்யலாமா?’  என்று  நொந்து  குறை   கூறினான்  என்ற
கருத்தைச் சுருங்கிய சொற்களால் கம்பர் புலப்படுத்துகின்றார்.       46

கலிவிருத்தம்
 

712.‘நாண் உலாவு மேருவோடு
   நாண் உலாவு பாணியும்.
தூண் உலாவு தோளும். வாளி
   யூடு உலாவு தூணியும்.
வாள் நிலாவின் நூல் உலாவும்
   மாலை மார்பும். மீளவும்
காணல் ஆகும்? ஆகின். ஆவி
   காணல் ஆகுமேகொலாம்.
 
  

அந்த     இராமனது தோளின் அழகைக் கண்டு)  நாண்   உலாவு
மேருவோடு
 -  ஆதிசேடனாகிய  நாணோடு  மேரு  மலை  போன்ற
வில்லுடன்;  நாண்  உலாவு  -  (அவ் வில்லின்) நாணில் உலாவுகின்ற;
பாணியும்  
- கையும்;  தூண்  உலாவு  தோளும் - தூண்களை ஒத்த
தோள்களும்;  வாளி ஊடு - அம்புகள் இடையே; உலாவு தூணியும் -
செருகப்  பெற்ற  அம்பறாத்  தூணியும்;  வாள் நிலாவின் - ஒளிமிக்க
சந்திரனைப்  போன்ற;  நூல்  உலாவு  -  பூணூல் அலையும்; மாலை
மார்பும்  
- வெற்றிமாலை சூடிய திருமார்பும்;  மீளவும் - மறுமுறையும்;
காணல்  ஆகும்  ஆகின்
- காணக் கூடுமாயின்; ஆவி - என்னுயிரை;
காணல் ஆகும்
- நான் காணமுடியும் (அது கூடுமா?).

‘என்     ஆவி வில்லும்   கையுமாகியும். தூணியும் தோளுமாகியும்.
பூணூலும்  மார்புமாகியும்  உள்ளது.  அத்தகைய   ஆவியைக்  காணின்
எனது  ஆவியைக்  கண்டதாகும்.  அவ்வாறு    காணாவிட்டால்  உயிர்
இழப்பேன்’ என்று சீதை கூறுகிறாள்.

தூண் உலாவு -  உலாவு - உவம உருபு. உலாவ என்பது வெவ்வேறு
பொருளில் வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி.            47