பக்கம் எண் :

454பால காண்டம்  

லால்;     சஞ்சலம்   கலந்த - துன்பம்   வந்து கலங்கும்; போது -
இப்போது;  உய்ய  வந்து - (நான்) உயிர் பிழைக்கும்படி என் அருகே
வந்து;  தையலாரை  -  (ஆதரவற்ற)  பெண்களை; அஞ்சல் அஞ்சல்
என்கிலாத  
- அஞ்சாதீர். அஞ்சாதீர் என்று கூறி அபயம்  அளிக்காத;
ஆண்மை   
-   ஆண்மை;   என்ன  ஆண்மையோ  -  எத்தகைய
ஆண்மையோ?

வருந்தும்  பெண்களை அணுகி அஞ்சல் என்று அபயம் அளிப்பதே
ஆண்மைக்கு  அழகு.  ஆனால்.  அப்படிச்  செய்யாத    இப்பிரானது
ஆண்மை என்ன ஆண்மை என்று   வெறுப்பினால் இயற்பழிக்கின்றாள்
சீதை.                                                    49
   

715.‘இளைக்கலாத கொங்கைகாள்!
   எழுந்து விம்மி என் செய்வீர்?
முளைக்கலா மதிக்கொழுந்து
   போலும் வாள் முகத்தினான்.
வளைக்கலாத விற் கையாளி.
   வள்ளல். மார்பின் உள்ளுறத்
திளைக்கல் ஆகும்ஆகில். ஆன
   செய் தவங்கள் செய்ம்மினே!
 
  

இளைக்கலாத    - இளைக்காது பருத்து வரும்; கொங்கைகாள் -
தனங்களே;  எழுந்து  விம்மி  - (நீங்கள்) மேன்மேல் எழுந்து பருத்து
வருதலால்;  என்  செய்வீர் - என்ன காரியத்தைச் சாதித்து  விடுவீர்?;
முளைக்கலா
-  வானில் தோன்றாத;  மதிக்  கொழுந்து  போலும் -
என்றும்   ஒரு  தன்மைத்  தாயுள்ள  சந்திரனைப்   போன்ற;   வாள்
முகத்தினான்
- ஒளியுள்ள முகத்தை யுடையவனும்; வளைக்கலாத வில்
-  (யாராலும்)  வளைக்கமுடியாதபடி  அரிதான  வில்லை;  கை  ஆளி
வள்ளல்  
-  கையில்  ஏந்தியவனுமாகிய  அருள்மிக்க    அவனுடைய;
மார்பினுள்
-  திருமார்பை;  உறத் திளைக்கலாகும் ஆகில் - இறுகத்
தழுவக் கூடிய வழி ஏற்படுமாயின்; ஆன செய்தவங்கள் - அதற்கேற்ப
செய்யத் தக்க தவங்களை; செய்ம்மினே - செய்யுங்கள்.

‘கொங்கை    முளைத்தெழுவதன் பயன் அவனது மார்பைத் தழுவிக்
கொள்ளுதலேயாகும்.  அந்த  நிலை கிடைப்பதற்கான வழி   இருந்தால்
அதைச்  செய்யுங்கள்.  அதைவிட்டு    நீங்கள்  எழுந்து  விம்முவதால்
பயன் எதுவுமில்லை’ என்று சீதை கூறுகிறாள்.                    50
   

716.‘எங்கு நின்று எழுந்தது. இந்த
   இந்து? வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று. அனங்கன் எய்த
   அம்பின் வந்த சிந்தை நோய்