இலைமுகப் படத்து- பனையோலையின் முகப்பாகிய படத்தில்; அவன் எழுதிக் காட்டிய - அச் சனக மன்னன் எழுதிக் காண்பித்த; தலைமகன் சிலைத் தொழில் - (தன்) மூத்த மைந்தனாகிய இராமனது வில்லாற்றலானது; செவியில் சார்தலும் - (தன்) காதில் பட்டவுடனே; வயிரத் தோள்கள் - (தசரதனுடைய) வயிரம் போன்ற உறுதியான தோள்கள்; நிலைமுக வலையங்கள் - தம்மிடம் நிலை பெற்ற தோள்வளைகள்; நிமிர்ந்து நீங்கிட - வாய்விட்டுக் கழன்றுபோகும்படி; மலை என வளர்ந்தன - மலைபோலப் பூரித்தன. தன் மூத்த மைந்தனான இராமனது வீரச் செயலை வேறொரு மன்னன் புகழ்ந்து எழுதியதைக் கேட்டுத் தசரதன் மகிழ்ச்சியடைந்து தோள் பூரித்தான் என்பது. 4 |