பக்கம் எண் :

472பால காண்டம்  

வரைப்     புயங்களில் சாந்தும்-  மலைபோன்ற தோள்களில் பூசிய
சந்தனக்  குழம்பும்;  மாழ்கி  -  (கீழே   உதிருமாறு)  அழிந்து போய்;
அக்கடல் செல் ஆறு
- அந்தக் கடல் செல்லுகின்ற வழியானது;  மெல்
அணை  என  
- (ஆண்களும் மகளிரும் கலவி நிகழ்த்தும்) மெல்லிய
படுக்கைபோலப்; பொலிந்தது - பொலிவுற்றது.

கூட்ட    மிகுதியால் இடையிடையே நெருக்கம் உண்டாக. அதனால்
ஒருவர்மேல் ஒருவர் உராய்தலால் சந்தனமும்  குங்குமமும்  உதிர்ந்தன.
அவ்வாறு    உதிர்ந்த   அக்குழம்புகள்   கலந்து   செல்லும்    வழி
படுக்கைபோல   விளங்கிற்று   என்பது.  -  தன்மைத்  தற்குறிப்பேற்ற
அணி.                                                    15

                                      மகளிர் ஆடவர் திரள்
 

747.முத்தினால். முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால். இள வெயில் பரப்பும்;- பாகினும்
தித்தியா நின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே.
 

பாகினும் தித்தியாநின்ற- வெல்லப் பாகைக் காட்டிலும் தித்திக்கும்;
சொல் சிவந்த வாய்ச்சியர்
- சொல்லையும். சிவந்த வாயையும் உடைய
பெண்களின்; உத்தராசங்கம்  இட்டு  -  மேலாடையிட்டு; ஒளிக்கும்-
மறைத்து  வைத்துள்ள;  கூற்றம்  -  இயமனைப்  போன்ற  வருத்தும்
தனங்கள்;  முத்தினால்  -  (தாம் அணிந்துள்ள) முத்து  மாலைகளால்;
முழு நிலவு எறிக்கும்
- நிறை  மதியின் ஒளியை வீசும்; மொய்ம் மணி
பத்தியால்
- நெருங்கிய இரத்தின மணிகளின் வரிசையால்; இளவெயில்
பரப்பும்
- இளவெயிலைப் பரவ விடும்.

தனங்களைக் கூற்றம் என்று உருவகப்படுத்தினார்.

தனங்களில் அணிந்த  முத்துமணி வடங்களால் நிலவு. வெயில் என்ற
இரண்டும் ஒரே காலத்தில் தோன்றும் என்ற நயம் கருதத் தக்கது.

உத்தராசங்கம்     - மேலாடை (வடசொல்).  கூற்றம்    உயிர்களை
உடலிலிருந்து  பிரிக்க  நோய் முதலியவற்றில் மறைந்துநின்று  பிரித்தல்
போல   இக்கூற்றமான   கொங்கை  மேலாடையில்   மறைந்து  நின்று
வருத்துகின்றது என்பது.                                      16
 

748.வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு. மாப் பிடி
புல்லிய களிறு என. மைந்தர் போயினார்.
 
  

வெறித்த  குஞ்சியர்-   (மலர்மாலை   முதலியவற்றால்)   மணம்
பொருந்திய தலைமயிரினையுடையவரும்; கல்லினைப் பழித்து