அருவி பாய் கவுள்- அருவிபோல மதநீர் பாயும் கன்னத்தையும்; தாறு எனக் கனல் உமிழ் - அங்குசம் என்ற சொல்லைக் கேட்டதும் தீயைக் கக்குகின்ற; தறுகண் யானை - அஞ்சாமையுடைய யானைகள்; மாறு என - தமக்குப் பகையென்று கருதி; தடங்களைப் பொருது- இரு கரைகளை மோதி இடித்து; மாமரம் - பெரிய மரங்களை; ஊறு பட்டு இடைஇடை - முடியும்படி நடுநடுவே; ஒடித்து - ஒடித்தும்; சாய்த்து - கீழே முறித்துச் சாய்த்தும்; உராய் - (அம்மரங்களின் மேல்) உரசியும்; ஆறு என - ஓர் ஆறு செல்வது போல; சென்றன - போயின. கரைகளோடு மோதுதல். மரங்களை ஒடித்தல். சாய்த்துத் தள்ளுதல். உராய்தல் - இவை யானைக்கும். ஆற்றுக்கும் ஒத்துள்ளன. அதனால் யானை செல்வது ஆறு செல்வது போன்றது என்றார். பொருது. ஒடித்து. சாய்த்து. உராய் என்னும் வினையெச்சங்கள் யானைக்கும் ஆற்றுக்கும் பொருள்படுமாறு பொதுவாக அமைந்தன. தாறு - குத்துக் கோல். அங்குசம். 22 படைப் பெருக்கம் |