விரி மணித் தார்கள்- விரிந்த கிண்கிணி மாலைகளை; பூண்ட - அணிந்த; வேசரி வெரிநில் - கோவேறு கழுதைகளின் முதுகில்; தோன்றும்- காணப்படுகின்ற; அரி மலர்த்தடங்கண் - செவ்வரி பரந்த தாமரை போன்ற விசாலமான கண்களையுடைய; நல்லார் - பெண்கள்; ஆயிரத்து இரட்டி சூழ - இரண்டாயிரவர் (தன்னைச்) சூழ்ந்து வர; இருவரைப் பயந்த நங்கை - (இலக்குமணன் சத்துருக்கனன் ஆகிய) இருவரையும் மக்களாகப் பெற்ற சுமித்திரை; கொண்டலின் மின் - மேகத்தில் தோன்றும் மின்னல்; இது என்ன - இவ் உருவம் என்று பார்த்தவர் கருதும்படி; குருமணி சிவிகைதன்மேல் - நீல இரத்தினம் இழைக்கப் பெற்ற பல்லக்கின்மேல்; யாழ் இசை முரல - யாழ் இசை ஒலிக்க; போனாள் - சென்றாள். நீலமணிப் பல்லக்கில் இருக்கும் சுமித்திரைக்கு மேகத்தில் தோன்றும் மின்னல் உவமையாயிற்று. பல்லக்கில் சுமித்திரை செல்ல. மங்கையர் இரண்டாயிரவர் கோவேறு கழுதையின் மேல் சென்றனர் என்பது. 64 |