பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்497

ரவர்     தன்னைச்  சூழ்ந்து  வர;  தெய்வ  மங்கையரும்  நாண -
தெய்வப்  பெண்களும் (தன் சிறப்பைக் கண்டு)   வெட்கம் அடையவும்;
தேன்  இசை  முரல
- வண்டுகள் இசையோடு பாடவும்; ஆய்மணி -
ஆராய்ந்து  பதிக்கப்பட்ட  மணிகளால்  செய்யப்  பெற்ற; சிவிகைதன்
மேல்
- பல்லக்கிலே; போனாள் - சென்றாள்.

கணிகையர்   சூழச்  செல்லும்  கைகேயிக்குக்  கமலத்  தடாகத்தில்
பொலியும் அன்னம் உவமையாயிற்று.                          63
 

795.விரி மணித் தார்கள் பூண்ட
   வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார்
   ஆயிரத்து இரட்டி சூழ.
குரு மணிச் சிவிகைதன்மேல்.
   கொண்டலின் மின் இது என்ன.
இருவரைப் பயந்த நங்கை.
   யாழ் இசை முரல. போனாள்.
 

விரி  மணித் தார்கள்- விரிந்த கிண்கிணி மாலைகளை; பூண்ட -
அணிந்த;  வேசரி  வெரிநில்  -  கோவேறு  கழுதைகளின்  முதுகில்;
தோன்றும்
- காணப்படுகின்ற; அரி மலர்த்தடங்கண் - செவ்வரி பரந்த
தாமரை  போன்ற விசாலமான கண்களையுடைய; நல்லார் - பெண்கள்;
ஆயிரத்து  இரட்டி  சூழ  
- இரண்டாயிரவர் (தன்னைச்) சூழ்ந்து வர;
இருவரைப்  பயந்த  நங்கை
- (இலக்குமணன் சத்துருக்கனன் ஆகிய)
இருவரையும்  மக்களாகப்  பெற்ற  சுமித்திரை;  கொண்டலின் மின் -
மேகத்தில்  தோன்றும்  மின்னல்;  இது என்ன - இவ் உருவம் என்று
பார்த்தவர்  கருதும்படி;  குருமணி சிவிகைதன்மேல் - நீல இரத்தினம்
இழைக்கப்  பெற்ற  பல்லக்கின்மேல்; யாழ் இசை முரல - யாழ் இசை
ஒலிக்க; போனாள் - சென்றாள்.

நீலமணிப்     பல்லக்கில்  இருக்கும்   சுமித்திரைக்கு   மேகத்தில்
தோன்றும்  மின்னல்  உவமையாயிற்று. பல்லக்கில்  சுமித்திரை  செல்ல.
மங்கையர்  இரண்டாயிரவர்  கோவேறு   கழுதையின் மேல்  சென்றனர்
என்பது.                                                  64
 

796.வெள் எயிற்று இலவச் செவ்வாய்
   முகத்தை வெண் மதியம் என்று.
கொள்ளையின் சுற்றும் மீன்கள்
   குழுமிய அனைய ஊர்தி.
தெள் அரிப் பாண்டி பாணிச்
   செயிரியர் இசைத் தேன் சிந்த.