பக்கம் எண் :

498பால காண்டம்  

வள்ளலைப் பயந்த நங்கை.
   வானவர் வணங்க. போனாள்.
 

வெள் எயிறு- வெண்மையான பற்களையும்; இலவச் செவ்வாய் -
சிவந்த  இலவின்   இதழ்போன்ற  வாயையும்  உடைய;  முகத்தை  -
(கோசலாதேவியின்) முகத்தை; வெண் மதியம் என்று - வெண்மையான
நிறைமதி என்று கருதி; கொள்ளையின் சுற்று - (வானிலே) மிகுதியாகச்
சுற்றிக் கொண்டிருக்கும்; மீன்கள் குழுமிய  அனைய - நட்சத்திரங்கள்
ஒன்றாகக்  கூடினாற்  போல;  ஊர்தி  -  சிவிகையாகிய  ஊர்தியிலே;
வள்ளலைப் பயந்த நங்கை
- இராமனைப் பெற்ற கோசலாதேவி; தெள்
அரிப் பாண்டி
- தெளிந்த வண்டின் இசை  போன்ற பாண்டி என்னும்
தக்கேசிப் பண்ணினால்; பாணிச் செயிரியர் - ஆகிய இசைப் பாட்டில்
வல்ல   பாணர்;   இசைத்  தேன்  சிந்த  -  இசையாகிய  தேனைச்
சொரியவும்;  வானவர்  வணங்க  - தேவர்கள் (தன்னை) வணங்கவும்;
போனாள்
- சென்றாள்.

கோசலையின்     முகத்தைச்  சந்திரன்  என்று கருதி வானெங்கும்
உள்ள நட்சத்திரங்கள் ஒன்றாகக் கூடியதுபோலப்  பன்னிற  மணிகளால்
செய்யப்பெற்ற   பல்லக்கின்மேல்  கோசலை  சென்றாள்   என்பது.  -
மயக்க அணியை அங்கமாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணி.      65
 

797.செங் கையில். மஞ்ஞை. அன்னம்.
   சிறு கிளி. பூவை. பாவை.
சங்கு உறை கழித்த அன்ன
   சாமரை. முதல தாங்கி.
‘இங்கு அலது. எண்ணுங்கால். இவ்
   எழு திரை வளாகம்தன்னில்
மங்கையர் இல்லை’ என்ன.
   மடந்தையர். மருங்கு போனார்.
 

எண்ணுங்கால்     - ஆராயுமிடத்து; இவ் எழுதிரை - இந்த ஏழு
கடல்களால் சூழப்பெற்ற; வளாகம் தன்னில் - மண்ணுலகத்தில்; இங்கு
அலது
- இந்த இடத்தில் (அயோத்தி) அல்லாமல்; மங்கையர் இல்லை
-  பெண்கள்  வேறு  இடத்தில்  இல்லை; என்ன - என்று (கண்டவர்)
கருதுமாறு;(பெருந்திரளாக); மடந்தையர் - மகளிர்;   செங்கையில் -
தம்முடைய   அழகிய   கையில்;   மஞ்ஞை  அன்னம்  -  மயிலும்
அன்னமும்;  சிறுகிளி - சிறிய கிளியும்; பூவை பாவை - நாகணவாய்ப்
பறவையும்   பாவைகளும்;   சங்கு   உறை   கழிந்த   அன்ன  -
உறையிலிருந்து  அப்போது  தான்  எடுத்த  சங்குபோன்ற; சாமரை  -
வெண்மையான  சாமரையும்;  முதல  -  முதலியவற்றையும்; தாங்கி -
தாங்கிக்  கொண்டு;  மருங்கு -  சிவிகையின்  அருகில்; போனார் -
சென்றார்கள்.