ஆடவர் ஆவி சோர - (தம்) கணவரின் உயிர் வருந்தித் தளரும்படி; அஞ்சனம் வாரி சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர் பெருகுமாறு; ஊடலில் சிவந்த நாட்டத்து - புலவியால் செந்நிறம் அடைந்த கண்களையுடைய; உம்பர்தம் அரம்பை மாதர் - தேவர்களின் மனைவியர்; கோதை நின்றும் துறந்த - தம் முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ் விரிந்த மந்தார மாலைகள்; வாடல நறவு அறாது - வாடாதனவாகித் தேனும் நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே விளங்கும். ஊடல் கொண்ட தேவ மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த கண்களில் கண்ணீரைப் பெருக்கிக் கழற்றியெறிந்த மந்தார மாலைகள் அம் மலையின் பல இடங்களிலும் காணப்படும் என்பது. தெய்வ மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன. 11 |