பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்537

குறத்தியர்      கூந்தற்     கமுகின்      பாளைகளிலே     மலர்
மாலையையணிவித்து   அவை   தமது    கூந்தலோடு    ஒப்பாவதைக்
கண்டனர்.     தெய்வ     மகளிர்    தம்    கடகத்தை     வாங்கிக்
காந்தளிலேயணிந்து  அம்  மலர் தம்  கைக்கு  ஒப்பாவதைக் காண்பார்
என்பது.  மண்ணுலகத்தவரும்.  விண்ணுலகத்தவரும்  மகிழ்வதற்கு  அம்
மலை இடனாயுள்ளது என்றார்.                                12
 

855.

சரம் பயில் சாபம் என்னப்
   புருவங்கள் தம்மின் ஆடா.
நரம்பினோடு இனிது பாடி.
   நாடக மயிலோடு ஆடி.
அரம்பையர் வெறுத்து நீத்த
   அவிர் மணிக் கோவை ஆரம்.
மரம் பயில் கடுவன் பூண.
   மந்தி கண்டு உவக்கும் மாதோ.

 

சரம் பயில் சாபம் என்ன - அம்பு பொருந்திய வில்லைப் போன்ற;
புருவங்கள் தம்மின் ஆடா
- புருவங்கள் தம்மிலே ஆடாமல் இருக்க;
நரமபினோடு இனிது பாடி
- யாழ் நரம்போடு பொருந்த இனிமையாகப்
பாடி;  மயிலோடு நாடகம் ஆடி - மயில்களோடு (ஒப்ப) நடனம் ஆடி;
அரம்பையர்  வெறுத்து  
-  தெய்வ  மகளிர்  (கணவர் மீது) ஊடலை
உட்கொண்டு; நீத்த  அவிர்மணிக் கோவை - கழற்றியெறிந்த ஒளிரும்
நவமணி   மாலைகளையும்;  ஆரம் - முத்தாரங்களையும்; மரம் பயில்
கடுவன்  
-   மரங்களில் பழகுகின்ற ஆண்குரங்குகள்; பூண - (தமக்கு)
அணிவிக்க;  மந்தி  கண்டு  உவக்கும்  -  பெண்  குரங்குகள் (அந்த
அணிகளின்) அழகைக் கண்டு மகிழ்ச்சியடையும்.

தெய்வப்     பெண்கள்  ஊடலால்  கழற்றியெறிந்த  இரத்தினமாலை
முதலியவற்றை  ஆண்குரங்குகள்  பெண்குரங்குகளுக்கு  பூட்டின; அந்த
அழகைக் கண்ட அப் பெண் குரங்குகள் மகிழ்ந்தன என்பது.       13
 
 

856.

சாந்து உயர் தடங்கள்தோறும்
   தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம்
   குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக்
   கதிரொடும் கலந்து வீசச்
சேந்து. வானகம். எப்போதும்
   செக்கரை ஒக்கும் அன்றே.
 

சாந்து உயர் தடங்கள் தோறும்  -  சந்தன  மரங்கள் ஓங்கியுள்ள
மலைச் சாரல்கள் தோறுமுள்ள; தாது ராகத்தின் சார்ந்த - காவிக்