கற்களின் செந்நிறத்தோடு பொருந்திய; கூந்தல் அம் பிடிகள் எல்லாம் - புறமயிருள்ள பெண்யானைகள் எல்லாம்; குங்குமம் அணிந்தபோலும் - குங்குமக் குழம்பு அப்பியவற்றை ஒத்துள்ளன; காந்து இன மணியின் சோதி - ஒளி விடுகின்ற பதுமராகக் கற்களின் செந்நிற ஒளியானது; கதிரொடும் கலந்து பூச - சூரியன் கதிர்களோடு சேர்ந்து செந்நிறத்தைப் பூச; வான் அகம் எப்போதும் - வானமானது எப்பொழுதும் செந்நிறமடைந்து; செக்கரை ஒக்கும் - செவ்வானத்தைப் போலும். செவ்வானம் மாலைக் காலத்தில்தான் தோன்றும். ஆனால். மலையிலுள்ள பதுமராக மணியொளி சூரியக் கதிர்களோடு மேலிடமெங்கும் பரவியிருப்பதால் பகலிலும் அச் செவ்வானம் தோன்றுவதாயிற்று என்பதாம். தாதுராகம்: காவிக்கல்லின் செந்நிறம். காவிக் கற்களில் சார்வதால் கரிய யானைகள் குங்குமக் குழம்பு பூசப் பெற்றார்போலத் தோன்றும் என்பது. பிறிதின் குணம் பெறலணியும். உவமையணியும் சேர்ந்து வந்துள்ளன. 14 |