கோடு உலாம் - கொம்புகளில் பூத்த; நாகப் போதோடு - சுரபுன்னை மலர்களோடு; இலவங்க மலரும் கூட்டி - இலவங்க மலரையும் சேர்த்து; சூடுவார் - அணிகின்றவரான அம் மலைவாணர்கள்; களி வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல் உண்பார் - தூய மணம் பொருந்திய மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு) குற்றம் இல்லாத மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் - இரட்டையர்களான கின்னரமென்னும் தேவசாதியர் பாடுகின்ற; பாடலால் ஊடல் நீங்கும் - இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல் நீங்குகின்றன; பரிமுக மாக்கள் கண்டார் - குதிரை முகங்கொண்ட தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள். பூவைப் பறித்துச் சூடுதலும் மதுவைப் பருகுதலும். இனிய பாடலைக் கேட்டலும் தேவசாதியினர் செயல்களைக் கண்டு மகிழ்வதுமாக அங்கே சென்ற மக்கள் இருந்தார்கள் என்பது. கின்னர மிதுனம்: ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான தேவசாதியர். பரிமுக மாக்கள்: குதிரை முகமும் மனித உடலும் கொண்ட தேவசாதியர். 16 |