பக்கம் எண் :

  பூக்கொய் படலம்561

குழையெனும்     காதணியும்;   சேர்ந்து   மின்ன - ஒருங்கிணைந்து
மின்னவும்;  பம்பு தேன் அலம்ப ஒல்கி - அணிந்துள்ள மாலைகளில்
மொய்த்த  வண்டுகள்  ஒலிக்கவும்  அசைந்து;  பண்ணையின் ஆடல்
நோக்கி  
-  தோழியர் கூட்டத்தோடு  அப்பெண்டிர் விளையாடுவதைப்
பார்த்து;  வம்புஅவிழ்  அலங்கல் மார்பின்  மைந்தரும்  -  மணம்
விரிகின்ற   மாலைகளையணிந்த   மார்பினராய    ஆடவரும்;  கொடி
அ(ன்)னாரை  
-  மலர்க்  கொடி  அனைய  மகளிரை; கொம்பொடும்
குறித்து அறிந்து  உணர்தல் தேற்றார்
- இவை பூங்கொம்புகள். இவர்
மகளிர்  என்று  ஊகித்து  (தெளிவுற)  உணர   இயலாதவராக  மயங்கி
நின்றனர்.

பகுத்தறியும்     தன்மையராய   ஆடவரும்.  இவர்  மகளிர். இவை
மலர்க்கொடிகள்  எனப்  பகுத்துணர  இயலாதவாறு   தயங்கித்  தவிக்க
நேர்ந்தது  என  அம்மகளிரின்  அழகும் அணியும்  கூறி  வியந்தவாறு.
சுருளும்   குழைகளும்   மின்னுதல்.   தேன்    அலம்ப    அசைதல்
பண்ணையில்   ஆடல்   எனும்   செயல்கள்    மகளிர்க்கும்   மலர்க்
கொம்புகட்கும்    பொருந்தும்   பொதுத்தன்மை    கண்டு    இரட்டுற
மொழிந்தார்.                                                5

                                          குயில்களின் நாணம்
 

895.

பாசிழைப் பரவை அல்குல்.
   பண் தரு கிளவி. தண்தேன்
மூசிய கூந்தல். மாதர்
   மொய்த்த பேர் அமலை கேட்டு.
கூசின அல்ல; பேச
   நாணின. குயில்கள் எல்லாம் -
வாசகம் வல்லார் முன் நின்று.
   யாவர் வாய் திறக்க வல்லார்?

 

குயில்கள் எல்லாம் - அந்தச் சோலையில் உள்ள குயில்கள் யாவும்;
பாசிழைப்  பரவை  அல்குல்  
- பசும்பொன்னால் அமைந்து மணிகள்
இழைத்து  இயற்றிய   அணிகள்  பூண்ட பரந்த அல்குலையும்; பண்தரு
கிளவி  
-  இசையென்னுமாறு  வெளிப்படும்   இனிய   சொற்களையும்;
தண்தேன்  மூசிய  கூந்தல்  மாதர்
- (சூடிய மலரிலிருந்து) குளிர்ந்த
தேன்  பரவிய  கூந்தலையும்  உடைய   பெண்டிரின்;  மொய்த்தபேர்
அமலை  கேட்டு  
- நெருங்கிச் சூழ்ந்த பேரொலியைக் கேட்டு; கூசின
அல்ல  
-  (புதியோரைக்  கண்ட)   கூச்சத்தால்  (வாய்மூடிக் கிடந்தன)
அல்ல;  பேச நாணின - (அந்த மகளிர்முன்  தமக்குற்ற  தாழ்வுணர்ச்சி
மேலீட்டால்)  பேசுதற்கு  வெட்கமுற்று (வாய்மூடிக்) கிடந்தன;  வாசகம்
வல்லார்  முன்நின்று
- (இனிமையாகப்) பேச வல்லார் முன்னிலையில்;
யாவர்   வாய்   திறக்க வல்லார்?
-  யாரே  வாய்  திறந்து  (பேச)
வல்லவர்கள்?

புதியோர்     முன்பு    பேச    இயலாமை    கூச்சம்   எனவும்.
உயர்ந்தோர்முன்.  தன்  சிறுமையினால்  செயலிழந்து  பேச  இயலாமை
நாணம்  எனவும்  படும்.  “கருமத்தால்  நாணுதல்  நாணு” (திருக். 1012)
என்பார் வள்ளுவனாரும்.