பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்593

தேன்     நகும்  நறவமாலை  -  வண்டுகள்  (உண்டு)  மகிழும்
தேனையுடைய மலர்மாலை (யணிந்த); செறிகுழல் தெய்வம் அன்னாள்
-  அடர்ந்த  கூந்தலையுடைய  தேவதையை   ஒத்தாள் ஒருத்தி; தான்
உடைக்  கோலமேனி  
- தான்கொண்ட  அழகிய உடல்; தடத்திடைத்
தோன்ற  நோக்கி  
- தடாகத்தில் (நிழலாகத்) தோன்றுவதைப் பார்த்து;
இந்நல்நுதல்  நான்நக  நகுகின்றாள்  
- இந்த நல்ல நெற்றியுடையாள்
நான்  சிரிக்கும்  போதெல்லாம்  சிரிக்கின்றாள்; தோழி ஆம் என்று -
(ஆகவே  இவள்) என்னுடையதோழி யாவாள் என்று  கூறி;  விலையின்
ஊனம்   இல்  ஆரம்  
-  விலை  மதிப்புடைய  குற்றமற்ற   (முத்து)
மாலைகளை (நிழல் தோழிக்கு); உளம் குளிர்ந்து உதவுவாரும் - மனம்
உவந்து கொடுத்து நிற்கின்றவர்களும்.

இன்பத்தில்     இன்பமும்.    துன்பத்தில்    துன்பமும்   கூறுதல்
உயிர்த்தோழியர்    இயல்பு    ஆதலின்.    “நான்நக    நகுகின்றாள்
இந்நன்னுதல்  தோழியாம்”  என்றாள்.  தேன்  ஒருவகை  வண்டு. இது
நல்ல  மணத்தே  செல்லும்  எனவும்  ஊற்றறிவு   முதலிய   ஐயறிவும்
இதற்கு  உண்டு  எனவும்   நச்சினார்க்கினியர்  கூறுவார்   (சீவக. 892
உரை). குற்றமற்ற விலைமதிப்புடைய  முத்துமாலையை  உளம் குளிர்ந்து
ஒரு  பெண்  ஈதல்  அரியசெயல்   ஆதலின்   “தெய்வம் அன்னாள்”
என்றார்.                                                   8
 

937.

குண்டம் திரு வில் வீச.
   குலமணி ஆரம் மின்ன.
விண் தொடர் வரையின் வைகும்
   மென் மயிற் கணங்கள் போல.
வண்டு உளர் கோதை மாதர்
   மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப்
   புனற் கரை சார்கின்றாரும்;
 

வண்டுளர்   கோதை மாதர் - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்மாலை
யணிந்த  மகளிர்; மைந்தர்தம்  வயிரத் திண்தோள் - ஆடவர்களின்
வயிரம்போல்  வலிமை  பொருந்திய   திண்ணிய   தோள்கள் என்னும்;
தண்டுகள்  தழுவும்  ஆசை  
-  (கடைந்தெடுத்த  அழகு  பொலியும்)
தண்டாயுதங்களை   (தோள்களை)    ஆசையோடு    தழுவிக்கொண்டு;
விண்தொடர் வரையின் வைகும்
- வானத்தையளாவுகின்ற மலைகளில்
வாழும்;  மென்மயில்  கணங்கள்போல - மெல்லிய மயில் கூட்டங்கள்
செல்வதுபோல;  குண்டலம்  திருவில்  வீச  - (செவிகளில் அணிந்த)
குண்டலங்கள்  வானவில்லினைப்போல்  ஒளியுமிழ;  குலமணி  ஆரம்
மின்ன  
- சிறந்த மணிமாலைகள் மின்னலைப்போல்  ஒளிசிந்த;  புனல்
கரை சேர்கின்றாரும்
- நீர்நிலையின் கரைகளை அடைகின்றவர்களும்.

புனல்     -  ஆகுபெயர். திருவில் - வானவில். வரையின் வைகும்
மயிற்கணங்கள் போல.  தரையின்  வைகும் மயிற்கணங்கள் புறப்பட்டன
என்பது ஒரு நயம்.                                          9