விளங்குபவளாய்; வண்ணப் பூவெலாம் மலர்ந்த பொய்கை - அழகிய (குவளை. நெய்தல் முதலிய) பூக்கள் எல்லாம் மலர்ந்துள்ள பொய்கையில்; தாமரை பொலிவது ஒத்தாள் - (ஒரு) தாமரைப்பூ (தனித்து) விளங்குவதைப் போன்றிருந்தாள். பூவெனப் படுவது பொறிவாழ் பூவே யாதலின் மலர்களின் அரசியாய்த் தாமரை விளங்குவதுபோல. மகளிரின் அரசியாய் இவள் விளங்கினாள் என்க. “ஒரு தனியோங்கிய திருமலர் போன்று......(மணிமே. 15.75-77). ஏ: அம்பு. பண்ணை - மகளிர் கூட்டம். அருவமாய் உருவமற்ற மனத்தையும் எய்ய வல்ல மன்மதனுக்கும் அம்புகளை வழங்கவல்ல கண்களையுடையாள் என வியந்து கூறினார். மும்மூர்த்திகளையும் துணைதேட வைத்தவன் ஆதலின் மன்மதனை. “வீரன்” என்றார். உருவுடன் இயைந்த போது சிவபிரானையும். உருவிலியான போது உலகோரையும் வயப்படுத்தும் வீரன் அவன் என்க. மேல் மூன்று பாடல்களிலும். மகளிர் சூழ நின்ற ஆடவரை வர்ணித்த கவி. இப்போது பெண்டிர் சூழ பெண்ணை வருணித்தவாறு. 15 |