பக்கம் எண் :

598பால காண்டம்  

விளங்குபவளாய்;     வண்ணப்  பூவெலாம்  மலர்ந்த  பொய்கை -
அழகிய  (குவளை.  நெய்தல் முதலிய)  பூக்கள்  எல்லாம்  மலர்ந்துள்ள
பொய்கையில்;  தாமரை  பொலிவது ஒத்தாள்  -  (ஒரு)  தாமரைப்பூ
(தனித்து) விளங்குவதைப் போன்றிருந்தாள்.

பூவெனப்     படுவது   பொறிவாழ்  பூவே  யாதலின்   மலர்களின்
அரசியாய்த்  தாமரை விளங்குவதுபோல.  மகளிரின்  அரசியாய்  இவள்
விளங்கினாள்     என்க.     “ஒரு      தனியோங்கிய      திருமலர்
போன்று......(மணிமே.  15.75-77).  ஏ:   அம்பு.   பண்ணை  -   மகளிர்
கூட்டம்.

அருவமாய்    உருவமற்ற  மனத்தையும் எய்ய வல்ல மன்மதனுக்கும்
அம்புகளை  வழங்கவல்ல  கண்களையுடையாள்  என வியந்து கூறினார்.
மும்மூர்த்திகளையும்  துணைதேட  வைத்தவன்  ஆதலின்  மன்மதனை.
“வீரன்”   என்றார்.   உருவுடன்  இயைந்த   போது   சிவபிரானையும்.
உருவிலியான  போது  உலகோரையும்  வயப்படுத்தும்   வீரன்  அவன்
என்க.

மேல்     மூன்று  பாடல்களிலும்.  மகளிர்  சூழ  நின்ற  ஆடவரை
வர்ணித்த    கவி.    இப்போது    பெண்டிர்    சூழ     பெண்ணை
வருணித்தவாறு.                                             15
 

944.

மிடலுடைக் கொடிய வேலே என்ன
   வாள் மிளிர்வது என்ன.
சுடர் முகத்து உலவு கண்ணாள்.
   தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும்
   வளர் கொடி பலவும் சூழ.
கடலிடைத் தோன்றும் மென் பூங்
   கற்பக வல்லி ஒத்தாள்.
 

மிடல்     உடைக் கொடிய வேலே என்ன - (ஆடவர் நெஞ்சில்
ஊடுருவலில்)   வலிமையுடைய   கொடிய  வேலே   போன்று;  வாள்
மிளிர்வது என்ன
- (ஒளிர்வதில்) வாள் (ஒன்று) மின்னுவதே போன்று;
சுடர்முகத்து உலாவு கண்ணாள்
- ஒளிர்கின்ற முகத்திலே உலாவுகின்ற
இருகண்களையுடையவளாய்;  தோகையர்  சூழ  நின்றாள்  -  மயில்
அனைய   மகளிர்   சூழ்ந்து    நிற்க    (இடையே)   நின்ற  ஒருத்தி;
மடல்உடைப்   போது  காட்டும்  
-  இதழ்களையுடைய  மலர்களைத்
தோற்றுவிக்கும்; வளர்கொடி பலவும் சூழ -  வளர்ச்சியுடைய கொடிகள்
பலவும் சூழ்ந்திருக்க; கடலிடைத் தோன்றும் - திருப்பாற் கடலிலிருந்து
வெளிவந்த;   மென்பூங்   கற்பக  வல்லி  ஒத்தாள்   -  மெல்லிய
மலர்களைக்கொண்ட கற்பக வல்லியே போன்றிருந்தாள்.

மண்ணகத்து     மலர்க்     கொடிகளுக்கிடையே.    விண்ணகத்து
படர்கொடிகளாய்  மகளிரிடையே  அவள்   விளங்கினாள்   என்பதாம்.
கற்பகவல்லி  - வான்  உலகக்  கற்பகத்தருவில் படரும் கொடி. “வேலே
என்னலாய்”  என்றும்  பாடம்.   வேல்.  மகளிர்  கண்ணிற்கு  உவமை
யாதல்: “ஓக்கிய முருகன் கைவேல் ஓர் இரண்டு