பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்635

பொய்த்தலை மருங்குலாள் - (இடையுண்டென்பதைப்) பொய்யாக்க
வல்ல  (நுண்ணிய)  இடையுடையாள்  ஒருத்தி;  கருத்தின்  நீக்கலள்;
புல்லிய   கைத்தலம்  நீக்கினள்  
-  
(தன்)  மனத்திலிருந்து  (கூடும்
உணர்வை)  நீக்காதவளாய்.  (மதுமயக்கால்  புறத்தே  தன் கணவனைத்)
தழுவிய  கைகளை எட்டும் எடுத்து விட்டாள்;  சித்திரம் போன்ற அச்
செயல் -
விசித்திர நிகழ்ச்சி போன்ற அந்தச்  செயல்; ஓர் தோன்றற்கு
-  கணவன் ஒருவனுக்கு; சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்தது -
கைவாள்    ஒன்று     (அவன்)    மார்பின்   இடையே   உருவியது
போன்றிருந்தது.

“வீழும்     இருவர்க்கு இனிதே. வளியிடைப் போழப் படாமுயக்கு”
(திருக். 1108) ஆதலின். அவள்  கைத்தலம்  நீக்கியது.  அவனுக்கு வாள்
இடைப்புகுந்தது   போன்ற  துயர்  விளைத்தது   என்க.   சித்திரம்  -
விசித்திரம்.   “புல்லிக்கிடந்தேன்;    புடைபெயர்ந்தேன்   அவ்வளவில்
அள்ளிக்  கொள்வு  அற்றே   பசப்பு”   (திருக்.  1187) என்ப வாகலின்.
கைத்தலம்  நீக்கியது  (விசித்திரம்  போன்ற  செயல்  ஆனது. கருத்தின்
நீக்காதவள்    (மதுமயக்கத்தால்)    கைத்தலம்    நீக்கினள்    என்க.
மதுமயக்கம்  இல்லையெனில்.  கைத்தலம்  நீக்கல்  நிகழ்ந்தே இருக்காது
என்பதாம். “பூ இடைப் படினும்  யாண்டுகழிந்தன்ன  நீருறை  மகன்றில்
புணர்ச்சி  போலப்  பிரிவு  அரிதாகிய   தண்டாக்காமம்”   (குறுந். 57)
என்க.                                                    45
 

1007.

மெல்லியல் ஒருத்தி. தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள். ‘போதி தூது’ எனச்
சொல்லுவான் உறும்; உற. நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து. விம்மினாள்.
 

மெல்லியல்     ஒருத்தி - மென்மைத் தன்மைபொருந்திய ஒருத்தி;
தான்  விரும்பும்  சேடியை  
- தன் விருப்பத்திற்குரிய ஒருதோழியை;
புல்லிய  கையினள்  
- தழுவிய கையினையுடையவளாய்; போதி தூது
எனச்   சொல்லுவான்  உறும்  
-  (எனக்காகக்  கணவனிடம்)  தூது
போவாயாக  எனச்  சொல்ல வருவாள்;  உற. நாணும்; சொல்லலள் -
அப்படிச்  சொல்லவருமிடத்து   நாணம்   வந்து   தடுக்கும்;  அதனாற்
சொல்லமாட்டாள்;எல்லை இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள்
-  
(இவ்வாறு  அவள்  காதலால்   சொல்ல  நினைப்பதும். நாணத்தால்
சொல்லாமல்  விடுவதுமாக)  அளவில்லாத  காலம்  முழுவதும்  (வீணே
கழித்து வெறிதே) இருந்து புலம்பினாள்.

“இராப்பொழுது   முழுதும் இருந்து விம்மினாள் மெல்லியள் ஒருத்தி”
என்பதனால்  அவள்  ஒருத்தியாக  இருந்து   தூதனுப்ப   எண்ணியும்
நாணத்தால்  இயலாமற்போனதனை   நினைந்து.   அவள்  மெல்லியள்
ஆயிற்றே என் ஆவளோ என்று  கவிஞர்  வருந்தும் வருத்தம் பாட்டில்
கேட்கிறது.                                                46
 

1008.

ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி. தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை. மற்று ஒரு