பக்கம் எண் :

636பால காண்டம்  

நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற. சில மொழி விளம்பினாள்.
 

ஊறுபேர்     அன்பினாள்  ஒருத்தி  -  மேன்மேற்  சுரக்கின்ற
பேரன்பினையுடையாள்  ஒருமங்கை; தன் உயிர் மாறு இலாக்காதலன்
செயலை  
-  தன்னையன்றி   வேறு  உயிர் இல்லாதவன் ஆகிய (தன்)
காதலன்   செய்த   (பிழைச்)    செயல்களை;  மற்று  ஒரு  நாறுபூங்
கோதைபால்   நவில  நாணுவாள்
-  மணம்  வீசும்  மலர்மாலைகள்
அணிந்த  வேறொருத்தியினிடம்   கூறுதற்கு.   (அழைத்த பின் கூறாது)
நாணம்  உறுவாள்;  வேறு வேறு உளசில மொழி  விளம்புவாள்  -
(அழைத்தற்கு ஏதாவது பேசவேண்டுமே என்று)  தொடர்பற்ற  பல்வேறு
சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“தான்     எவ்வம்  கூரினும்  நீ செய்த  அருளின்மை. என்னையும்
மறைத்தாள்  என்தோழி;  அது    கேட்டு நின்னையாள் பிறர்முன்னர்ப்
பழிகூறல்   தான்   நாணி”    (கலி:   44.  8-10)   எனும்  சான்றோர்
மொழியினைக்  கற்றவள்  ஆதலின்  மற்றொரு  கோதைபால்  காதலன்
செயலை  நவில  நாணினாள்.  அவளோடு   ஏதாவது  பேசவேண்டுமே
என்று  ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாத   வேறு  வேறு  சொற்களைப்
பேசிக்கொண்டிருந்தாள்   என்றவாறு    “எள்ளின்   இளிவாம்  என்று
எண்ணி  அவர்திறம்  உள்ளும்  உயிர்க்காதல்  நெஞ்சு”  (திருக். 1298)
எனும் வள்ளுவக் காதலி போன்றாள் இவள் என்க.                47
 

1009.

கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடம்பும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ.
 

கருத்து     ஒரு தன்மையது - கருத்தை ஆராய்ந்தாலும் (இருவர்)
கருத்தும்  ஒன்றுக்கொன்று   சமமாம்;  உயிரும் ஒன்று - (இருவர்க்கும்
வெவ்வேறு   உடம்பில்  இருப்பினும்)   உயிரும்   ஒன்றேயாகும்;  தம்
அருத்தியும்  அத்துணை  ஆய  நீரினார்
-  (ஒருவர்  மீது ஒருவர்
கொண்டுள்ள)     காதலும்     (அழகும்      உயிரும்போல)    ஒரு
தன்மையதேயாம்;  ஒருத்தியும்  ஒருத்தனும் உடம்பும்  ஒன்று எனப்
பொருத்துவர்  இவர்எனப்  புல்லினார்  
- (இப்படி.  எல்லாம் ஒன்று
ஆகவே  இருப்பதால்.  உடல்மட்டும்  ஏன்   இரண்டாக  ஆவது என
நினைந்து)  அக்கணவனும்   மனைவியும்   உடலையும்   ஒன்றாக்கிவிட
என்ணுகின்றனரோ   என்று    (கண்டோர்)   நினைத்திடுமாறு  இறுகத்
தழுவினர்.

அரோ   - அசை “உருத்தெரி  தன்மையும் உயிரும் ஒன்று” என்பது
“கருத்தொரு  தன்மையது  உயிரும்   ஒன்று”   என்னும்   பாடத்திலும்
மோனைச் சிறப்புடைய பாடபேதம். “ஒன்றா  விதித்திலனே  உயிர்போல
உடம்பையுமே”  (தஞ்சை.  வா.கோ)  என  ஏங்குவர் காதலர். இவர்கள்
ஈருயிரை  ஓருயிர் ஆக்குவதில் வெற்றிகண்டவர்  ஆதலின்.  இப்போது
ஈருடலையும் ஓருடலாக்கும் முயற்சியில்