வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி - மூங்கில் போன்ற தோளுடையாள் ஒரு மாது; வேந்தன் வந்து எதிர்தலும் - (ஊடல் உற்றிருந்த அவள்முன்) கணவன் வந்து எதிர் நின்றவுடன்; தன் மனம் எழுந்து முன் செல - (அவன்பால் உள்ள விருப்பத்தால் இவளையறியாது) இவள் மனம் எழுந்து அவன்பால் செல்ல; மதிமுகம் கதுமென வணங்கினாள் - (தன்) மதியனைய வதனத்தை (சாய்த்து) அவன் எதிர்பாராத வண்ணம்) வணங்கி நின்றாள்; அது புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்தது - இப்படி வணங்கி நிற்பது. (இவளிடம் இது வரை காணாப்) புதுமையாதலின். (எத்தனை வெகுளியையுள்ளடக்கியதோ இவ்வணக்கம் என்று) அவனுக்குப் (பெரியதோர்) அச்சம் உண்டாயிற்று. “மனைவி உயர்வும் கிழவோன் பணிவும். நினையுங் காலைப் புலவியுள் உரிய” (தொல். பொருள். 31) ஆதலின். மரபு மீறி மனைவி பணிந்த இப்புதுமை. பெரு வெகுளியின் குறியீடு எனக் கணவன் அஞ்சினன் என்க 49 |