பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்639

மேகத்தினிடையே தோன்றித் தோன்றி  மறையும்  மின்னற் கொடிபோல;
ஒரு பூத்த கொடியன்னாள்  புறப்படும் புகும்
- ஒப்பிலாப் பூங்கொடி
போன்ற   அவள்    (வந்திருப்பான்    என்று   இருப்பிடத்திலிருந்து)
வெளிப்படுவாள்;  (வரவில்லையென்று  உட்சென்று)  மறைவாள்  (ஆகி
ஆயினாள்).

பூத்த     கொடி  இப்போது  மின்னற் கொடியும் ஆயிற்று என்றபடி
“வருவார்   கொழுநர்   எனத்   திறந்தும்.    வாரார்  கொழுநர்  என
அடைத்தும்  திருகு  குடுமி  விடியளவும்   தேயும்”  (கலிங். கடை. 49)
என்பார்  சயங்கொண்டாரும்.  “ஒரு  பூத்த  கொம்பனாள். கொழுநனை
மறப்பிலள்;  வரவு  நோக்குவாள்;  பெயரும்  சிந்தையாள்;  மின் எனப்
புறப்படும்  புகும்”  எனக்  கூட்டுக.  மேகத்தே   மின்னல்   தோன்றிக்
கணந்தோறும்  மறைவது  போல. வீட்டின் முன்  இவளும்  கணந்தோறு
தோன்றி மறைதலால் மின்னலுக்கு உவைமயானாள்.               52
 
 

1014.

எழுத அருங் கொங்கைமேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில். வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள் ஒருத்தியை. தூது வேண்டுவாள்!
 

(ஒருத்தி) எழுத அரும் கொங்கை மேல்- ஒரு மங்கை ஓவியத்தால்
எழுதுவதற்கரிய   பொலிவுடைய   (தன்)  தனங்களின் மீது; அனங்கன்
எய்த  அம்பு  உழுத வெம்புண்களில்  
-  மன்மதன் தொடுத்துவிட்ட
அம்புகள்    துளைத்ததனால்   விளைந்த   கொடும்   புண்களின்மேல்;
வளைக்கை  ஒற்றினாள்  
-  வளையல்கள்  அணிந்த (தன்) கரங்களை
(வைத்து   வைத்து)   ஒற்றினாள்;   அழுதனள்;  சிரித்தனள்-  துயர்
மிகுதியால்  அழுவாள்;  தன்  நிலையை   எண்ணி   (துன்பச்  சிரிப்பு)
சிரிப்பாள்;அற்றம் சொல்லி ஒருத்தியைத்தூது வேண்டித் தொழுதாள்
-  
தான்  படும்  துன்பங்களையெல்லாம்  தோழி ஒருத்திக்குச் சொல்லி.
தூது செல்ல வேண்டிக் (கைகூப்பித்) தொழுவாள்.

அநங்கன்     செய்த   வெம்புண்களை   ஆற்றத் தன் கரங்களால்
இயலாதாகையால்.   ஆற்றுங்  கரமுடையானை   அழைத்து   வரற்குத்
தூதேகுமாறு   தொழுது   தவித்தாள்    என்க.   “உடம்பும்  உயிரும்
வாடியக்காலும்  என்னுற்றன கொல்  இவையெனின்  அல்லது  கிழவோற்
சேறல்   கிழத்திக்கு   இல்லை”   (தொல்.  பொருளியல்.  9)  என்பது
இம்மண்ணின்  மரபாதலின் அவனை அழைத்து  வருமாறு  தோழியைத்
தொழுதாள்.                                               53
 

1015.

‘ஆர்த்தியும். உற்றதும்.
   அறிஞர்க்கு. அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல்
   வறிது அன்றோ?’ என
வேர்த்தனள்; வெதும்பினள்;
   மெலிந்து சோர்ந்தனள்;