பக்கம் எண் :

640பால காண்டம்  

பார்த்தனள். ஒருத்தி தன்
   பாங்கு அனாளையே.

 

ஆர்த்தியும்   உற்றதும் அற்ற(மும்) - (தனக்கு நேர்ந்துள்ள) காம
நோயும்  (அதன்  பின்)  விளைவுகளும்  (இவ்விரண்டால் எழுந்ததுள்ள
உடல்    உள)   குறைகளும்;  அறிஞர்க்கு  வார்த்தையின்   தான்
உணர்த்துதல் வறிது அன்றோ?  எனா  
-  (குறிப்பால்  உணரவல்ல)
குறைகளும்  அறிஞர்  ஆயினோர்க்கு  வாய்மொழியால் தானே சென்று
உரைத்து  விளக்குவது  வீண்  அன்றோ?  என்று  கருதி; வேர்த்தனள்;
வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் -
(தோழிக்குத் தன் துயர்களை
வாயால்  உரையாது)  உடல்  வெயர்த்து  மனம்  வெதும்பி மிக வாடிச்
சோர்ந்து   (அணையில்)   சாய்ந்தாள்;   தன்   பாங்கு  அனாளைப்
பார்த்தனள்  -  
(என்  நிலை  கண்டும்.  கணவனை  வருவித்தற்குரிய
வழிதுறை  நாடாமல்  வாளா  இருத்தியோ?  எனும்  குறிப்போடு)  தன்
அருகுள்ள தோழியை (ஏக்க விழிக்ளோடு) பார்த்தாள்.

குறிப்பால்   உணரும் திறம் குறித்துக் கவிஞர்க்கு உள்ள விருப்பமும்
மதிப்பும்  இப்பாடலிலும்  இலங்கல்  காணலாம்.  தோழியைக் குறிப்பால்
உணரவல்ல  அறிவுத்  திறமுடையவளாகத்  தலைவி   கருதும்  பாங்கு
இங்குத் தெளிவாம்.                                         54
 

1016.

தனங்களின் இளையவர்தம்மின். மும் மடி;
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்.
மனங்களில் நுழைந்து. அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமால்.
 

தனங்களின்   இளையவர் தம்மின் மும்மடி - தனங்களையுடைய
இள  மகளிர்களைக்  காட்டிலும்  மும்மடங்காக;  கனம்  கனம் இடை
இடைக்    களிக்கும்   கள்வன்   ஆய்    
-    மிக   அதிகமாக
அவ்வவ்விடங்களில்   களிப்புக்   கொண்டு   (யார்க்கும்   தெரியாமல்)
கள்வனைப்  போல்;  மனங்களில்  நுழைந்து  -  (ஆடவர் பெண்டிர்
ஆகிய   இருபாலார்)   மனங்களுக்குள்ளே  புகுந்து;  அவர்  மாந்து
தேறலை  
-  அவர்கள்  பருகின  மதுவின் தெளிவினை; அனங்கனும்
அருந்தினான்   ஆதல்  வேண்டும்  
- மன்மதனும்  உண்டிருப்பான்
ஆதல் வேண்டும்.

ஆல்-அசை.     மன்மதன்  சித்தத்தில் உதிப்பவன் எனும் பொருள்
தரும் ‘சித்தசன்’ எனும் பெயருடையான்  ஆதலின்.  உள்வந்த மதுவை.
உள்ளே  உள்ள இவனும்  உண்டிருப்பானாதலினால்  அங்கிருப்பாரினும்
அவன் மும்மடங்கு (மகிழ்வில்) பொலிந்தான் என்றார்             55

                                             ஊடலும் கூடலும்
 

1017.

நறை கமழ் அலங்கல் மாலை
   நளிர் நறுங் குஞ்சி மைந்தர்.