பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்659

சென்ற  அளவில்; கையின் ‘வந்து  ஏறு’  என   -  தசரதன்  தனது
கரங்களைச்  சைகையால் காட்டி. வந்து தேரில் ஏறுக என்று தெரிவிக்க;
கடிதின்  வந்து ஏறினான்
- விரைந்து வந்து (சனகன்) தசரதன் தேரில்
ஏறினான்; ஐயனும் முகம் மலர்ந்து  அகம்  உறத்  தழுவினான்  -
(அப்பொழுது)   தசரதச்   சக்கரவர்த்தியும்    முக  மலர்ச்சி   பெற்று.
மனத்திலும் மலர்ச்சி பொருந்தத் தழுவினான்.

சேனை     பின் நிற்கச் சனகன் முன் செல்லலும். தயரதன் கையால்
சைகை  காட்டித்  தேர்  ஏறச்  செய்தலும்  முகமும்   அகமும்   மலர
இருவரும்   தழுவுதலும்   ஒரேபாடலில்   சொல்    ஓவியப்   படிவம்
ஆக்கியிருத்தல்    சுவைத்தற்    பாலது.  அக்காலத்து.  விருந்தினராம்
வேந்தரை   வரவேற்கும்  ஒழுங்காசாரம்   தெளிவுறச்   சுட்டப்படலும்
உணர்க.  “கையின் வந்து ஏறு” என்பதற்கு.  கைகொடுத்து. வந்து ஏறுக
என்றான்   எனினுமாம்.   “முகத்தான்   அமர்ந்து   இனிது   நோக்கி
அகத்தான்  ஆம்  இன்  சொலினதே  அறம்”  (திருக். 93)  ஆதலின்.
“ஐயனும் முகம் மலர்ந்து அகம் உறத்தழுவினான்” என்றார்.         17
 

1046.தழுவி நின்று. அவன் இருங் கிளையையும். தமரையும்.
வழு இல் சிந்தனையினான். வரிசையின் அளவளாய்.
‘எழுக முந்துற’ எனா. இனிது வந்து எய்தினான்.-
உழுவை முந்து அரி அனான். எவரினும் உயரினான்.
 
  

உழுவை    முந்து அரி   அனான் - முந்தி வந்து புலி ஒன்றால்
வரவேற்கப்படுகிற  சிங்கத்தை  ஒத்தவனும்;  எவரினும்  உயரினான்-
(அங்கிருந்த)  அனைவரிலும்  உயர்ந்தவனுமான  தசரதச்  சக்கரவர்த்தி;
தழுவி  நின்று. அவன்  இருங்கிளையையும்  தமரையும்  
-  சனக
மன்னனை  அணைத்து  நின்று.  சனகனின்    பெருஞ்சுற்றத்தாரையும்.
நண்பர்களையும்; வழுவில் சிந்தனையினான் வரிசையின் அளவாய்-
குற்றமற்ற (தூய) எண்ணத்தினனாய் முறைப்படி நலம் வினவி; ‘முந்துற
எழுக  (எனா  
-  ‘முன்னாற்  செல்லுங்கள்’  எனக்  கூறி. (பின்னால்
சனகனைப்  பின்பற்றி);  இனிது  வந்து  எய்தினான்- இனிதே வந்து
மிதிலை நகர் அடைந்தான்.

அறிமுகமானவரிடம்.  முறைப்படி முகமன் உரை கூறும் முறை பற்றி.
“வரிசையின் அளவளாய்” என்றார். இதுவும் தொன்மை   ஒழுங்காசாரம்
சுட்டியது.   பரம்பொருளை   மகனாகப்   பெற்ற   தந்தை   யாதலால்
“எவரினும்  உயர்ந்தான்”  எனக்  கூறத்  தட்டில்லை  யாதல்  உணர்க.
வரவேற்கப்   பட்டார்  பின்  ஆகி.  வரவேற்றார்  முன்  ஆகி  வழி
கூட்டியவாறு   செல்லுதல்  மரபாதலின்  “முந்துற  எழுக”   என்றான்
தசரதன்.                                                  18

                                           இராமனின் வருகை
 

1047.இன்னவாறு. இருவரும். இனியவாறு ஏக. அத்
துன்னு மா நகரின்நின்று எதிர்வரத் துன்னினான்
-