பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்661

சிறப்பு     நிகழச்சிகளில்  வாரார்   எனும்   மரபு    தெரிவித்தவாறு.
மூவுலகத்தாறும் வணங்கவுள்ள பெருமான். ஓருலகத்தில்  ஒரு  பகுதியை
ஆள்கின்ற  தசரதனைத்  தொழ  வருகிறான்   என்று   அவதாரத்தின்
எளிவந்த கருணைத்திறமாகிய (சௌலப்பியம்) நீர்மை சுட்டியவாறு.   20
   

1049.யானையோ. பிடிகளோ. இரதமோ. இவுளியோ.
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்-
தானை ஏர் சனகன் ஏவலின். நெடுந் தாதை முன்
போன பேர் இருவர்தம் புடை வரும் படையினே?
 

நெடுந்தாதை   முன்பேர் இருவர் தம் புடை- (பெருமைக்குணம்)
மிக்க  தம்  தந்தையான  தசரதனது   எதிரிற் சென்று  பெருமைக்குரிய
(இராம.  இலக்குவர்)  இருவரின்  பக்கத்திலே;  தானை  ஏர்  சனகன்
ஏவலில் வரும் படையின்
- படைக்குரிய அழகினையுடைய சனகனின்
ஏவலினால்   உடன்   வரும்.  சேனையில்;  யானையோ.  பிடிகளோ.
இரதமோ.  இவுளியோ
- (ஆண்) யானைகளோ? பெண் யானைகளோ?
தேர்களோ?   குதிரைகளோ?   (இவற்றுள்   எவையோ   மிகுந்தவை?);
ஆனபேர் உறைஇலா நிறைவை யார் அறிகுவார்?-
பெரிய எண்களை
எண்ணுவதற்கான      உறையென்னும்      குறிப்பிலககம்     இட்டும்
எண்ணமுடியாத  (அந்த  யானை  முதலியவற்றின்) நிறைவினை அறிந்து
கூறவல்லவர் யாவருளர்?

உறை     - ஓர் இலக்கக் குறிப்பு. பொருள்களை எண்ணுங் காலத்து
ஒவ்வொரு   பெரிய   எண்ணுக்கும்  கழற்சிக்காய்.     குன்றிமணிகளை
ஒவ்வொரு விழுக்காடு வைக்கும் சிறு குறியீடு. “உறைபோடக்  காணாது”
என்னும்   வழக்கம்   காண்க.   “ஒழிந்த  பேர்   உயிர்கள்   எல்லாம்
அரக்கருக்கு  உறையும்  போதா”  (கம்ப. 4868) ; “அம்பண   அளவை
உறை   குறித்தாங்கு”  (பதிற்.  11:5)  ;    “இவ்வரக்கர்........உறையிடவும்
போதார்” (கம்ப. 5344) எனவருவனவும் காண்க.                  21

                      பணிந்த இராமலக்குவரைத் தயரதன் தழுவுதல்
 

1050.காவியும். குவளையும். கடி கொள் காயாவும் ஒத்து.
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே.
தேவரும் தொழு கழல் சிறுவன். முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து. அரசன்மாடு அணுகினான்.
 

காவியும்   குவளையும் கடிகொள் காயாவும் ஒத்து- நீலோற்பல
மலரையும்.   கருங்குவளை   மலரையும்   வாசனைகொண்ட   காயாம்
பூவையும் போன்று; ஓவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவொடு-
சித்திரத்தில்    எழுதும்   உருவம்    இனிமையின்றிப்     போகும்படி
விளங்குகின்ற ஒப்பற்ற வடிவத்துடனே; தேவரும் தொழுகழல் சிறுவன்
-    தேவர்களும்   வந்து   வணங்குதற்குரிய    திருவடிகளையுடைய
(சக்கரவர்த்தித்    திருமகனான)   இராமன்;   முன்   பிரிவது   ஓர்
ஆவிவந்தென்ன
- இரா