பக்கம் எண் :

  உலாவியற் படலம்689

பழுது     இலா ஒரு பாவை அன்னாள்- (எவ்வுறுப்பிலும்)  ஒரு
குற்றமும்  அற்ற ஓவியப்  பாவையைப் போன்றாள் ஒருத்தி; பதைத்து.
அழுது. வெய்துயிர்த்து
- (இராமனையடையும் வேட்கையால்) துடித்துக்
கண்ணீர்   விட்டு  வெப்ப  மூச்சினை  வெளிப்படுத்தி;   அன்புடைத்
தோழியைத் தொழுது சோர்ந்து அயர்வாள்  
-  தன்  அன்பு மிக்க
(உயிர்த்)   தோழியை   நோக்கிக்   கைகூப்பி   வணங்கி.   தளர்ந்து
சோர்வாளாய்;  இந்தத்  தோன்றலை   இம்மன்மதனால்   எழுதல்
ஆம்கொல்?  என்றாள்
-  இந்த  இராமபிரானை இந்த மன்மதனைக்
கொண்டு   ஓவியமாய்  எழுதி  வைத்துக்கொள்ள  ஆகுமோ    என்று
கூறுவாள்.

இராமன்     “ஓவியத்து எழுத ஒண்ணா  உருவத்தினையுடையான்”
(கம்ப.  4020)  ஆதலின். “எழுதல் ஆம் கொல்?” என்று  ஐயுற்றவாறு.
காதலர்  உருவை மனக்கிழியில் தீட்டும் கைவல்ல  ஓவியன்  மன்மதன்
ஆதலால்.   “இம்   மன்மதனால்”   என்றாள்.   “மதனற்கும்   எழுத
ஒண்ணாச் சீதை” (கம்ப. 483) என்பார்  முன்னும். “தேவு   தெண்கடல்
அமுது  கொண்டு அநங்கவேள் செய்த ஓவியம்  புகையுண்டது.”  (கம்ப.
5079) என்பதும் காண்க. அழகிய  வடிவங்களை  மன்மதன்  ஓவியமாகத்
தீட்டுவான்  என்பது கவிமரபாதல் காண்க. இவன் கண்  முன்  இல்லாத
போது  பார்த்து  மகிழ ஓர் ஓவியம் தேவை. இவன்  உருவை  நம்மால்
வரைய  இயலாது;  மன்மதனை  வேண்டினாலும்;  அவனாலும்   இவன்
வடிவை எழுதிவிட இயலுமா? என்று தோழியை வருந்தக் கேட்டாள்.  25
 

1088.வண்ண வாய் ஒரு வாணுதல். ‘மானிடற்கு.
எண்ணுங்கால். இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? இது உணர்த்துகின்றேன். இவன்
கண்ணனே! இது கண்டிரும். பின்’ என்றாள்.
 

வண்ணவாய்  ஒரு  வாள்  நுதல் -  அழகிய   வாயையும்  ஒளி
பொருந்திய   நெற்றியினையும்  உடையாள்  ஒருத்தி;   எண்ணுங்கால்
மானுடற்கு இவ் இலக்கணம்  எய்திட  ஒண்ணுமோ?
-  “எண்ணிப்
பார்த்தால்   மனிதன்   ஒருவனுக்கு    இத்தகைய   வடிவழகையுடைய
உத்தமலட்சணம்  பொருந்த  இயலுமா? (இயலாது)  (ஆகவே) ;  இவன்
கண்ணனே  இது  உணர்த்துகின்றேன்
- (இவன் மானுடன் அல்லன்)
இவன்   திருமாலே   ஆவான்.   இதனை.    நான்   அனுமானத்தால்
உங்கட்கெல்லாம்  இப்போது  உணர்த்துகின்றேன்; இதுபின் கண்டிரும்
என்றாள்
- (நான் சொல்வது உண்மையென்பதனைப்  பிரத்தியட்சமாக)
நீங்கள்  எல்லோரும்   பின்னால்  கண்ணால் காணப் போகின்றீர்கள்!’
என்றாள்.

இராமனைக்     கண்ணன் என்றுணர்ந்து  உணர்த்திய இவள் வாய்
வார்த்தை   மற்றைப்   பெண்கள்    வார்த்தையிலும்   அழகியதாய்த்
தோன்றியமையின்  அதனை  உரைத்த  வாயை  “வண்ணவாய்” என்று
போற்றி  மகிழ்கின்றார். மனித உருவிலே காணப்படாத  பேரழகு இவன்
வடிவில்  காணப்படுதலின்.  இவன்   கண்ணனாகிய   திருமாலே எனும்
முடிவுக்கு  வந்தாள். முன்னும் (1068)  இராமனைக்  கண்ணன் என்றமை
காண்க.                                                  26