பக்கம் எண் :

692பால காண்டம்  

ஆதலால்.  இவளை   “இந்து  முகத்தி”   எனப் பொருந்தக் கூறினாள்.
இந்து: சந்திரன் - உவமையணி.                               30
 

1093.ஆம்பல் ஒத்த அமுது ஊறு செவ் வாய்ச்சியர்.
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்.
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல். சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே?
 

ஆம்பல்   ஒத்து அமுது ஊறு செவ்வாய்ச்சியர்- செவ்வாம்பல்
மலரைப்  போன்று.  அமுதம்  போன்ற  இனிமையூறுதற்கு   இடமான
சிவந்த  வாயினையுடைய  மகளிர்  பலரும்; தாம் பதைத்து உள்உயிர்
தடுமாறுவார்  
-  (இராம  வேட்கையால்  மனமும் உடம்பும்)  துடித்து.
உடலினுள்   உள்ள  உயிர்  நிலை  கலங்கினர்;  தேம்பு  சிற்றிடைச்
சீதையைப்  போல்  
-  வருந்தும்  மெல்லிய இடையுடையாள் ஆகிய
சீதையினைப்   போல;  ஏம்பல்  சிறிது  பெற்றிலர்  - மகிழ்தற்கான
காரணத்தைச்    சிறிதும்   பெறாதவர்களாகிய   இவர்கள்;  எங்ஙனம்
உய்வரே?
- எவ்வாறு பிழைப்பார்?  மகிழ்தற்குக்     காரணம் சிறிதே
இருப்பினும்  மகளிர்  பிழைத்துக் கொள்வர்;   இன்றேல்    பிழைத்தல்
இயலாது எனக் கவிஞர் பெண்மையின் மென்மை நினைந்து ஏங்கியவாறு.
அமுது ஊறியும் பயன்   கொள்ளப்படாமல்  உள்ளது என்பார். “அமுது
ஊறு வாய்ச்சியர்” என்றார்.                                   31
 

1094.‘வேர்த்து. மேனி தளர்ந்து. உயிர் விம்மலோடு.
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்.
தீர்த்தன். இத்தனை. சிந்தையின். செங் கணின்.
பார்த்திலான்; உள் பரிவு இலனோ?’ என்றாள்.
 

மேனி வேர்த்து உயிர் தளர்ந்து-(இராம வேட்கையுற்றாள் ஒருத்தி)
உடல் வியர்த்து  உயிர்நிலை  குலைந்து;  விம்மலோடு  ஆர்த்தியுற்ற
மடந்தையர்  ஆரையும்  
- விம்முதலோடு அருந்துயர் உற்ற பெண்டிர்
எவரையும்; தீர்த்தன்    சிந்தையின்     செங்கணின்   இத்தனை
பார்த்திலான்
-  தூயோனான  இராமபிரான்.  உள்ளத்தாலும்  சிவந்த
கண்களாலும் சிறிதேனும்  நோக்கினான் அல்லன்;  உன்  பரிவிலனோ
என்றாள்
- அப்பெருமான்  உள்ளத்தே  (சிறிதேனும்)  அன்பு என்பதே
இல்லாதவனோ? என்று (துயரோடு) வினாவினாள்.

எத்தனை  மகளிர் மொய்ப்பினும் ஏறெடுத்தும் நோக்காத இராமனின்
இயல்புத்   திறம்  கூறி.  இராமபிரானின்  ஏக  பத்தினி    விரதத்தின்
ஏற்றத்திற்கு   அடித்தளம்   இட்டவாறு.   “இந்த   இப்பிறவிக்கு  இரு
மாதரைச்  சிந்தையாலும்  தொடேன்” (கம்ப. 5378) என்ற  செம்மையன்
இராமன்  ஆதலான்  “தீர்த்தன்  இத்தனை   சிந்தையின்.  செங்கணின்
பார்த்திலன்” என்றார். ஆகவே. இத்