பக்கம் எண் :

696பால காண்டம்  

யைப்     பார்த்து; அவ்வழி என் கருத்தும்   கண்டது   உண்டோ
என்றாள்   
-   நீ.   இராமனை   நாடிச்  சென்ற   அவ்வழியிடையே
என்னுடைய மனத்தை (அங்கு எங்காவது) பார்த்தது  உண்டோ?   எனக்
கேட்டாள்;அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ?ஆசை மிகுந்த
பின்பு வெட்கம் உள்ளதாகுமோ?

கருத்து     - ஆகு பெயராய் அது தோன்றும் மனத்தைக் குறித்தது.
ஆசை  வெட்கம்  அறியாது   என்பது   பழமொழி - வேற்றுப்பொருள்
வைப்பணி. அணுவடிவினதாய்க்  கண்ணுக்குப்   புலன் ஆகாத மனத்தை.
“வரும்    வழியில்    கண்டாயோ?”எனக்     கேட்டது.   வரம்பிகந்த
ஆசையினால்  வெட்கமறியாது கேட்டது என்க. என்   மனத்தை  வரும்
வழியில்  பார்த்தாயா என்று வினவினால் பிறர் ஏளனம்   செய்வார்கள்;
அது  வெட்கப்படவைக்கும்   என்பதனை   அவளால் அவள் வேட்கை
மிகுதியால் நினைக்கக் கூடவில்லை. பெண்மைக்குரிய   நாற்பண்புகளுள்
ஒன்றான  நாணத்தை வேட்கை உண்டு விடும் என்றவாறு  “காமம் விடு
ஒன்றோ  நாண்  விடு  நன்நெஞ்சே! யானோ  பொறேன் இவ்விரண்டு”
என்பாள் திருக்குறள் காதலியும் (திருக். 1247).                   38
 

1101.நங்கை. அங்கு ஒரு பொன். ‘நயந்தார் உய்ய.
தங்கள் இன் உயிரும் கொடுத்தார். தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண். எங்ஙன் விளைத்தது. இவற்கு?’ என்றாள்.
 

அங்கு  நங்கை ஒரு பொன் - அங்கே. பெண்களுட் சிறந்தவளாய
திருமகளைப் போன்றாள்  ஒருத்தி;  தமர்  நயந்தார்  உய்ய. தங்கள்
இன்னுயிரும்  கொடுத்தார்  
-  இந்த  இராமபிரானுடைய  குலத்தினர்.
தம்மை விரும்பி அடைந்தவர்கள் பிழைக்குமாறு  தங்களுடைய   இனிய
உயிரையும்  ஈந்தவர்  ஆவர்; எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகலா
வெங்கண்  
-  (அப்படியிருக்க)  எங்களுக்கு உரிய  இனிய உயிரையும்
(கவர்ந்து   கொண்டு)  எங்களுக்குக்   கொடுத்திடாத   கொடுந்தன்மை;
இவற்கு எங்ஙன் விளைந்தது? என்றாள்
- இந்த இராமனுக்கு எவ்வாறு
உண்டாயிற்று என்று வினவினாள்.

பொன்:     திருமகள்.  புறவொன்றின்   பொருட்டாகத்  துலைபுக்க
பெருந்தகை  (கம்ப.  243) யாகிய சிபி வேந்தனின்  குலத்து  வேந்தனா
இவன்?   என்கிறாள்.   குல  வேந்தரில்  மாறுபட்ட  ஓரில்   உடைய
குணவேந்தன் என்பதனால் இராமன் புகழே  மேம்படல்  காண்க. இவன்
முன்னோர்.  நயந்தோர்க்கு  உயிர்  கொடுக்க.  இவன்  உயிர்  எடுக்க
உள்ளான் ஆனது எப்படி என்று வியக்கிறாள்.                   39
 

1102.நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்.
‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால்.
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.