பக்கம் எண் :

  உலாவியற் படலம்697

நாமத்தால்  அழிவாள் ஒரு நன்னுதல்- (இராம வேட்கை எனும்)
அச்சத்தால்  நிலை   குலைந்தவளான   நல்ல  நெற்றியினையுடையாள்
ஒருத்தி; சேமத்து  ஆர்  வில்  இறுத்தது  தேருங்கால்  -  (ஆயுத
சாலையில்)   காவல்  நிறைந்திருந்த  சிவதனுசை   (எடுத்து)   இராமன்
முறித்த  காரணத்தை  ஆராயுமிடத்து; தூமத்து ஆர்குழல் தூமொழித்
தோகைபால் காமத்தால்  அன்று  
- (அகில்) புகை (மணம்) நிறையும்
கூந்தலையுடைய  தூய  மொழியினைப்   பேசும்   மயில்   அனையாள்
ஆகிய   சீதையினிடத்துக்   கொண்ட   ஆசையால்   அன்று  என்றே
தோன்றுகிறது;  கல்வியினால்  என்றாள்  -  (அவன் தான் கற்ற) வில்
வித்தையாகிய   கல்வியின்   திறம்   வெளிப்படச்  செய்த செயலாகவே
தோன்றுகிறது என்றாள்.

வேட்கை     மிகுந்தவர்கள்   நிகழும்    செயல்களைத்   தமக்குச்
சாதகமாகவே நோக்குவர் என்னும் உள  இயலை  அழகுறக்  கூறியவாறு.
இராமன்  பிற  மகளிரிடத்து  எவ்விதக்   காமக்   குறிப்பும் அற்றிருந்த
நிலையை  நோக்கிச்  சீதையிடத்தும்  அவ்வாறே   இருப்பான்   எனத்
தனக்குத்   தானே  ஆறுதல்   கொள்கிறாள்.   நாமத்தால்  அழிந்தாள்
என்பதற்கு.  இராம   நாமத்தைச்   சொல்லி  மெலிந்தாள்  எனினுமாம்.
சேமம்: காவல்.                                             40
 

1103.ஆரமும். துகிலும். கலன் யாவையும்.
சோர. இன்உயிர் சோரும் ஓர் சோர்குழல்.
‘கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?” என்றாள்.
 

ஆரமும் துகிலும் கலன் யாவையும்- முத்து மாலையும். சேலையும்
பிற  ஆபரணங்கள் யாவற்றையும் (இராம வேட்கையால்  வந்த) ; சோர
இன்னுயிர் சோரும் ஓர்  சோர்  குழல்  
- (தன் உடல் இளைப்பால்)
கழலவிட்டு உயிரும் தளர்ந்து விழும் நிலையுடைய  தளர்ந்த  கூந்தலாள்
ஒருத்தி; கோர வில்லி முன்னே எனைக் கொல்கின்ற மாரவேளின்-
‘அச்சம்    தரத்தக்க    வில்லை     ஏந்தியுள்ள    இந்த   இராமன்
முன்னிலையிலேயே  அஞ்சாமல்  வில்  எய்து  என்னைக்  கொல்கின்ற
மன்மதனைப் போன்ற; வலியவர் யார்?’ என்றாள் - வலிமையுடையார்
உலகில் யாவர் உளர்?’ என்று கேட்டாள்.

பெருவீரனின்     முன் எதிர் நிற்கும் துணிவே பெருவீரம்.   ஆம்.
ஆதலால்.  இராமன் என்னும் பெருவீரன்  கண்முன்னே  அபலைகளை
எய்கின்ற  மன்மதன் பெருவீரன்தான் என்று  குறிப்பால்  இகழ்ந்தவாறு.
அபலைகளை  எய்கின்ற  ஒருவனைத்  தட்டிக்   கேட்காது   நிற்கின்ற
இராமனின்   நிலையையும்   குறிப்பால்  சுட்டி  வருந்தினாள்   என்க.
ஆரமும்.  துகிலும்.  கலன்  யாவையும்   சோர்வதனால்   இன்  உயிர்
சோர்கின்றமை தெரிவித்தவாறு.                                41