பக்கம் எண் :

  உலாவியற் படலம்699

அடுத்து  விசுவாமித்திரனை  வணங்கினான்   என்பதுணர்த்த.  “இருவர்
தாளும் முறையின் (முறைப்படி) வணங்கினான்” என்றார்.           43
   

1106.இறைஞ்ச. அன்னவர் ஏத்தினர்; ஏவ. ஓர்
நிறைஞ்ச பூந் தவிசு ஏறி. நிழல்கள்போல்.
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான் அரோ
-
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான்.
 

அறம்   செய்காவற்கு அயோத்தியில்  தோன்றினான் - தருமம்
அழியாது  காப்பதற்காக  அயோத்தி   மாநகரத்தில்  அவதரித்தவனான
இராமபிரான்; இறைஞ்ச  அன்னவர்  ஏத்தினர் ஏவ - (வசிட்டரையும்
விசுவாமித்திரரையும்   இவ்வாறு)    வணங்க.    (உடனே)   அவர்கள்
(அவனை)  வாழ்த்தி.  (இவ்வாசனத்தில்  வீற்றிரு) என  நியமிக்க;  ஓர்
நிறைஞ்ச   பூந்தவிசு  ஏறி  
-  ஒப்பற்றதான பூவேலைகள்  நிறைந்த
ஆசனம்  ஒன்றின்மேல்  ஏறியமர்ந்து;  நிழல்கள்  போல்  புறம்செய்
தம்பியருள்   பொலிந்தான்  
-  தனது  நிழல்களைப்போல்  தன்னை
விடாமல் நிற்கின்ற தம்பியர் மூவரோடும் பொலிந்து நின்றான்.

“அயோத்தியில்     தோன்றியது  அறஞ்செய்  காவற்கே”   என
அறுதியிட்டவாறு.   இராவணனை  அழித்தல்  முதலிய   அனைத்தும்
அறங்காக்கவே   ஆதல்  தெளிவாம்.  “அறந்தலை  நிறுத்தி  வேதம்
அருள்  சுரந்து  அறைந்த  நீதித்  திறம்  தெரிந்து.   உலகம்  பூணச்
செந்நெறி  செலுத்தித்  தீயோர்  இறந்து  உக  நூறித்  தக்கோர் இடர்
துடைத்து   ஏக  ஈண்டுப்  பிறந்தனன்”   (கம்ப.  5885)   என்பதிலும்
அறந்தலை   நிறுத்தலையே   முதற்கடமையாகக்  குறிப்பிட்டுள்ளமை
காண்க.                                                   44

                         தயரதனும் மண்டபத்திற்கு வந்து அமர்தல்
 

1107.ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர. வெண்மதி.
வான் நிலா உற வந்தது மானவே.
 

மீன்    எலாம் தன்பின்வர- எல்லா நட்சத்திரங்களும் தனக்குப்
பின்னேவர; வெண்மதி  வான்நிலா உற வந்தது மான- வெண்ணிறச்
சந்திரன்   வானத்தை  ஒளியுறச்  செய்து  வருவது  போல;  தானை
மன்னன்  
-  சேனைகளையுடைய தசரத சக்கரவர்த்தி; ஆன மாமணி
மண்டபம்  அன்னதில்  சார்ந்தனன்  
-  பெருமைக்குரிய  மணிகள்
பொருந்திய அந்த மண்டபத்தை அடைந்தான்.

மீனுக்கும்     வானுக்கும் திங்களின் வருகை தனிப்பொலி வூட்டுதல்
போல.   அம்மண்டபமும்  அங்குள்ளோரும்   தசரதன்   வருகையால்
தனிப்பொலிவெய்தினர் என்க.                                45