பக்கம் எண் :

700பால காண்டம்  

1108.வந்து. மா தவர் பாதம் வணங்கி. மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட.
அந்தணாளர்கள் ஆசியொடு. ஆசனம்.
இந்திரன் முகம் நாணுற. ஏறினான்.
 

வந்து  மாதவர் பாதம் வணங்கி- (தசரத சக்கரவர்த்தி அவ்வாறு)
வந்து   பெருந்தவத்தினராகிய    வசிட்டரையும்   விசுவாமித்திரரையும்
(அடியுறத்  தொழுது); சிந்து  தேமலர்  மாரி  சிறந்திட  - (தன்மேல்
அங்குள்ளோர்  பலராலும்)  சொரியப்படுகிற  தேன்   நிறைந்த மலர்கள்
மழைபோல்   நிறைய;  அந்தணாளர்கள்  ஆசியொடு  -  (அறவோர்
ஆகிய)   அந்தணர்கள்   வாழ்த்துரைக்க;  இந்திரன்  முகம்  நாணுற
ஏறினான்   
-   (தேவர்கள்  தலைவனாகிய)  இந்திரனும்.   (இவனுக்கு
வாய்த்துள்ள   பேறு   தனக்கில்லையே    யென்று)    முகங்கவிழ்ந்து
வெட்கமுறுமாறு (ஆதனத்தில்) ஏறி வீற்றிருந்தான்.

இராமனாகிய     மகப்பேறும்.     சீதையாகிய     மருமகட்பேறும்
இந்திரனுக்கில்லை   யாதலால்  இந்திரன்  முகம்   நாணினான்  என்க.
முன்பு  கோசிக  முனிவனைப்  பணிய   அயோத்தியில்  எழுந்தபோது
தசரதனை.  “இந்திரன்  எனக்கடிது   எழுந்து  அடிபணிந்தான்” (கம்ப.
318)  எனத்  தசரதனை இந்திரனோடு ஒப்பிட்ட  கவிஞர்பிரான். இங்கு
இந்திரன்    நாண    எழுந்து   பணிந்தான்   என்றதன்    காரணம்.
இந்திரனுக்குத்    திருமகளை    மருமகளாகப்    பெறும்    வாய்ப்பு
இன்மையால் என்க.                                        46

                         மண்டபத்துள் வந்து திரண்ட மன்னர்கள்
 

1109.கங்கர். கொங்கர். கலிங்கர். குலிங்கர்கள்.
சிங்களாதிபர். சேரலர். தென்னவர்.
அங்க ராசர். குலிந்தர். அவந்திகர்.
வங்கர். மாளவர். சோளர். மராடரே.
 

கங்கர்.  கொங்கர். கலிங்கர். குலிங்கர்கள்- கங்க  நாட்டரசரும்
கொங்கு  நாட்டரசரும் கலிங்க மன்னரும் குலிங்க  மன்னரும்;  சிங்கள
அதிபர்.  சேரலர்.  தென்னவர்  
- சிங்கள அரசரும். சேர மன்னரும்.
பாண்டிய அரசரும்;  அங்கராசர்  குலிந்தர்.  அவந்திகர்  -  அங்க
நாட்டரசரும்.   குலிந்தநாட்டரசரும்.   அவந்தி  மன்னரும்;  வங்கர்.
மாளவர்.  சோளர்.  மராடர்
- வங்க மன்னரும். மாளவதேசத்தரசரும்.
மராட மன்னரும்.

இப்பாடலுடன்   மேல் வரும் இருபாடல்களும் சேர்ந்து ஒரு தொடர்.
இப்பாடலில்.   அடைமொழியே   இன்றி.   அரசர்     பெயர்களையே
இணைத்து கவியோசை குன்றாமல் இணைத்திருக்கும் திறம் காண்க.   47
 

1110.மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள்.
ஏனை வீர இலாடர். விதர்ப்பர்கள்.