பக்கம் எண் :

  உலாவியற் படலம்701

  

சீனர். தெங்கணர். செஞ் சகர். சோமகர்.
சோனகேசர். துருக்கர். குருக்களே.

 

மான    மாகதர். மச்சர். மிலேச்சர்கள் - பெருமை மிக்க மாகத
மன்னரும்  மச்ச நாட்டரசரும். மிலேச்ச தேசத்தரசரும்; - ஏனை  வீர
இலாடர்.  விதர்ப்பர்கள்
 -  மற்றுமுள்ள வீரமிக்க இலாட மன்னரும்.
விதர்ப்ப மன்னரும்; சீனர். தெங்கணர். செஞ்சகர். சோமகர் - (மகா)
சீன  தேசத்தரசரும்.  தெங்கண  தேசத்தரசரும்.   செம்மையான   சக
தேசத்தரசரும்.   சோமக   நாட்டரசரும்;   சோனகேசர்.   துருக்கர்.
குருக்களே
  -   சோனக  நாட்டரசரும்.  துருக்க  தேச  மன்னரும்.
குருநாட்டரசர்களும்.                                       48
 

1111.

ஏதி யாதவர். ஏழ் திறல் கொங்கணர்.
சேதி ராசர். தெலுங்கர். கருநடர்.
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்.
 

ஏதி  யாதவர்.   ஏழ்திறல் கொங்கணர் - ஆயுதங்கள்  ஏந்திய
யாதவ  அரசரும்.  ஏழு  பகுப்பினையுடைய  கொங்கண  அரசர்களும்;
சேதிராசர். தெலுங்கர் கருநடர்
  -    சேதி  நாட்டு  மன்னர்களும்.
தெலுங்கு  தேசத்தரசரும்.   கருநாடக   மன்னரும்;   ஆதி  வானம்
கவித்த அவனி வாழ்  சோதி  நீள்முடி  மன்னரும்  துன்னினார்
-  (இவ்வாறு  பஞ்ச   பூதங்களுள்)     முதலாவதான   ஆகாயத்தாற்
சூழப்பட்டுள்ள மண்ணுலகில் வாழும்  ஒளிமிக்க   மகுடங்களையணிந்த
அத்தனை  அரசர்களும் அம்மண்டபத்தில் வந்து நெருங்கினார்கள்.49
 

                       மங்கையரின் சாமரை வீச்சும் பல்லாண்டும்
 

1112. 
  

தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை. மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து. உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே.
 

தீங்கரும்பினும்  தித்திக்கும் இன் சொலார் - இனிய கரும்பினும்
இனிக்கின்ற  இன்சொற்களைப்பேசும் மகளிர்;  தாங்கு  சாமரை மாடு
தயங்குவ
 -  வீசுகின்ற  சாமரங்கள்  (தசரத வேந்தரின்)  பக்கங்களில்
விளங்குபவை;   ஓங்கி   ஓங்கி   வளர்ந்து  உயர்   கீர்த்தியின்
பூங்கொழுந்து பொலிவன போன்ற
.- மிக உயர்ந்து (விண்ணகம்முட்ட)
வளர்ந்து மற்றெல்லோர் புகழினும் உயர்ந்துள்ள (தசரதசக்கரவர்த்தியின்)
மிகு புகழாகிய  (பருமரத்தின்)  அழகிய   இளந்தளிர்கள்  மின்னுவதை
ஒத்திருந்தன.