பக்கம் எண் :

752பால காண்டம்  

மகளிரும்;    விரவினர்  விரைகின்றார்   - தம்மிற்  கலந்தவர்களாய்
(நகரை  அழகு  செய்ய)  விரைந்தவராய்;  உரைசெறி  கிளையோடும்
உவகையின்  உயர்கின்றார்
- சுற்றத்தாரோடு உரையாடிச் சீதை மணம்
எண்ணி. களிப்பில்  உயர்ந்தவராய்; கரைதெரிவு அரிது ஆகும் இரவு
ஒருகரை கண்டார்  
-  (என்று  பொழுது விடியுமோ  சீதைமணங்காண
என்ற   தவிப்பால்)   கரைகாண   இயலாததாய்  நீண்டிருந்த    அந்த
இருட்கடலினைக்  கடந்து  விடியல்  எனும்  கரையினை   அடைந்தவர்
ஆயினர்.  

விடியலை.  ஒரு ‘கரை’ கண்டார் என்பதனால். இரவு கடல் ஆயிற்று.
ஏகதேச  உருவகம்.  இராமபிரானும்   பிராட்டியும்   விரகவேட்கையால்
விடியலுக்கு   ஏங்கித்   தவித்தது   போலவே.   இவர்   மணங்காணத்
துடிக்கும்     காட்சி    வேட்கையில்.   மிதிலையிலிருந்து    மக்களும்
விடியலுக்கு  ஏங்கியிருந்தனர்  என்பதனை   “கரை தெரிவு  அரிதாகும்
விடிவு ஒரு கரை கண்டார்” என்பதனால் உணர்த்தியதிறம் காண்க.   20
 

                                             சூரியன் தோற்றம்
 

1180.‘அஞ்சன ஒளியானும்.
   அலர்மிசை உறைவாளும்.
எஞ்சல் இல் மணம். நாளைப்
   புணர்குவர்’ எனலோடும்.
செஞ் சுடர் இருள் கீறி.
   தினகரன். ஒரு தேர்மேல்.
மஞ்சனை அணி கோலம்
   காணிய என. வந்தான்.

 

அஞ்சன  ஒளியானும்- அஞ்சன மை போன்ற கருநிறங்  கொண்ட
(திருமாலாகிய)  இராமனும்;  அலர்மிசை  உறைவாளும்  -  தாமரைப்
பூவில்  வாழ்பவளாம்  திருமகளாகிய  சீதையும்;  எஞ்சல் இல்  மணம்
நாளைப்   புணர்குவர்  எனலோடும்   
-  நாளை  (ஒருவகையிலும்)
குறைவில்லாத  திருமணம்  கூடுவார்கள்   என்று   முரசறைந்த  செய்தி
கேட்டவுடன்; தினகரன்.  மஞ்சனை  அணிகோலம்  காணிய  எனச்
செஞ்சுடர்  இருள்கீறி ஒருதேர்மேல் வந்தான்
- சூரியன். தனது குல
மைந்தனான  இராமனின்  திருமணக்  கோலத்தைக்  காணத்  (அவாவிப்
புறப்பட்டான்   போல)    தனது   ஒப்பற்ற   தேர்மேல்  தன்  சிவந்த
ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் (கீழ்வானில்) உதித்தான்.  

குலப்பாட்டன்     கொள்ளுப்பேரன் திருமணம் காண வந்தாற்போல
வந்தான்   எனச்   சூரிய   உதயத்தை   இடம்   காலத்திற்கேற்றவாறு
புனைந்துரைக்கும் திறம் காண்க. ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.  

அஞ்சனம்     கருமை   நிறம்   உடையதேனும்.  அதுவும்   ஒளி
கூடியதாயின்   இராமன்   நிறத்துக்கு  ஒவ்வும்  என்பார்.   “அஞ்சன
ஒளியானும்” என்றார்.