பக்கம் எண் :

  பரசுராமப் படலம்813

-கொடியனான     இவன்  (இங்கு)  வர; நிபம் என்னைகொல் என -
காரணம்   என்னவோ   என்று;   வெய்துறும்  வேலை  -  வெப்பப்
பெருமூச்சு விடும் காலத்தில்-  

பரசுராமன்.     தான்  வென்ற  உலகம்  முழுவதையும்    காசியப
முனிவனுக்குத்   தானஞ்   செய்துவிட.  பரசுராமனைக்    கருவபங்கஞ்
செய்ததற்காக.  “தானஞ்  செய்த  இடத்தில்  வசிக்கலாமோ?”    எனக்
காசியபர்   கேட்க.   பரசுராமன்   வருணன்   அனுமதியுடன்    சைய
மலையிலிருந்து  தன்   கோடரிப்படையை  வீச.  அது விழுந்த   இடம்
வரையிலும்   கடல்   விலகிச்   சென்றது.   அவ்விடத்தைத்    தனக்கு
இருப்பிடமாகக்  கொண்டவன் பரசுராமன்  என்பது   முன்னிரண்டடியில்
உள்ள  பொருள்.  இன்றும்  கேரளம்.  “பரசுராம   க்ஷேத்திரம்”  என
அம்மக்களால்  வழங்கப்படுகிறது.  பரசுராமன்   பல   கொடுமைகளைச்
செய்திருந்தமையால்.  அவனைக் கண்ட தயரதன்.  “வெய்யன்”   என்று
துடித்தான்   என்க.  காசியப  முனிவருக்குத்   தானஞ்    செய்துவிட்டு
அந்நிலத்தில்  இராத்  தங்குவதில்லை  என  மலையில்  சென்று  தங்கி.
‘இனி   அரசர்களைக்   கொல்வதில்லை’  என்று  தவமேற்   கொண்ட
பரசுராமன்  இப்படி  வெய்யனாய்  வரக்  காரணம் என்னவோ  என்று
தசரதன் திகைத்தான் என்க.                                   15

            எதிரே வந்த பரசுராமனை. ‘யார்?’ என. இராமன் கேட்டல்
  

1278.பொங்கும் படை இரிய. கிளர்
   புருவம் கடை நெரிய.
வெங் கண் பொறி சிதற. கடிது
   உரும்ஏறு என விடையா.
சிங்கம் என உயர் தேர் வரு
   குமரன் எதிர். சென்றான்.
அம் கண் அரசவனும் இவன்
   “ஆரோ?” எனும் அளவில்.

 

பொங்கும்     படை  இரிய  -  மகிழ்ந்து  செல்கின்ற  படைகள்
பயந்தோடும்படி; கிளர் புருவம் கடை நெரிய  - பரசுராமன் சினத்தால்
உந்திய  புருவங்கள்  நுனியில்  நெளியவும்;  வெங்கண் பொறிசிதற -
கொடுமையுடைய  கண்களில் நெருப்புப் பொறி சிதறவும்;  கடிது  உரும்
ஏறு   என   விடையா   
-   விரைவாக  (விழும்)  பேரிடி  போலப்
பெருஞ்சினம்  கொண்டு; உயர்தேர்  வரு  சிங்கம்  என  - உயர்ந்த
தேரில்  ஏறி  வரும்  சிங்கம்  போல; குமரன்  எதிர்  சென்றான்  -
சக்கரவர்த்தித்   திருக்குமாரனான    இராமனின்   எதிரே   சென்றான்;
அங்கண்   அரசு    அவனும்    
-    அழகிய   கண்களையுடைய
(அனைவர்க்கும்)  தலைவனான  இராமனும்;  இவன்  ஆரோ?  எனும்
அளவில்  
-  இவன்  யாரோ என்று வினாவும் அப்போதே.  (தசரதன்)
(அரசன்  அடிமேல் உறவிழலும் எனும் அடுத்த  பாடலின்  தொடரோடு
முடியும்.)  

புருவ    நுனி நெளிதலும். கண் பொறி பறத்தலும் ஆகிய சினத்தின்
மெய்ப்பாடுகளைக்   கண்டு  படைகள்  தாம்  அஞ்சி ஓடினவே  தவிர.
இராமன் மகிழ்