பொருளோ? - இச்சிறிய மானிடர்கள் உனக்கு ஒரு பொருள் ஆவரோ? (ஆகார்); ‘இனி இவனும் எனது உயிரும் உனது அபயம்’ என்றான் - ‘இப்போது. (என் மகனாகிய) இந்த இராமனும். என்னுடைய உயிரும் உனது அடைக்கலப் பொருள்கள்’ (காத்தருள்) என்றான். வீரத்தால் வென்ற உலகம் முழுவதையும் தானமாகக் கொடுத்திட்ட. நீ. இப்போது எங்கள் உயிர்கள் இரண்டையும் தானமாகத் தந்தருளவேண்டும் என தசரதன் வேண்டினான். அயர்வான் - முற்றெச்சம். 19 |