பக்கம் எண் :

820பால காண்டம்  

என   -   மின்னலினால்   தளர்ச்சியுறும்  கொடிய  பாம்பு   போன்று;
வெய்துறல் உற்றான்
- (மனம்) வெதும்புதல் அடைந்தான்  (தசரதன்)  

என்னா.     இகழா.  விழியா.  உணரா.  நினையா.  தளரா என்னும்
செய்யா   என்னும்   எச்சங்கள்  உடன்பாட்டுப்   பொருளைத்   தந்து
உற்றான்   எனும்   வினை   முடிபு   கொண்டன.  அடிவிழுவானையும்
என்பதில்  உள்ள  உம்மை   அடிவிழுவானைப்  புறக்கணிக்கவும்  ஒரு
முனிவனால் எப்படி முடிந்தது எனும்  வியப்புத்  தோன்றுமாறு  நின்றது.
சம்பராசுரனை  வென்ற  தோளாற்றல்  வாய்ந்த   தசரதன்.   தவத்தின்
ஆற்றலின்  முன்  ஒன்றும்  செய்ய   இயலாமல்   தவித்தான்  என்பது
தோன்ற.   “தன்னால்   ஒரு  செயலின்மையை   நினையா”   என்றார்.
மின்னலின் ஒளி பாம்புகளை மிகப் பாதிக்கும் என்பது மரபு.         24
   

1287.மானம் மணி முடி மன்னவன்.
   நிலை சோர்வுறல் மதியான்.
தான் அந் நிலை உறுவான் உறு
   வினை உண்டது தவிரான்;
‘ஆன(ம்) முடை உமை அண்ணலை
   அந் நாள் உறு சிலைதான்
ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி
   கேள்!’ என உரைப்பான்;
 

மானம்     மணிமுடி மன்னவன்-   மானத்தையே  அணியாகக்
கொண்டமணி  முடி  சூடிய  தசரதன்;  நிலை சோர்வுறல் மதியான்-
(அந்த  மானம் நிலை தளர்வது  எண்ணி)  மயங்கும் நிலையடைவதைச்
(சிறிதும்)   கருதாதவன்   ஆனான்   (பரசுராமன்);  அந்நிலை  தான்
உறுவான் உறுவினை உண்டது தவிரான்
-அந்த நிலையை (விரைவில்)
தான் அடைய இருப்பதற்கான  ஊழ்வினை  உண்டாயிருப்பதை  விலக்க
வகையற்றவனாய்;  ஆனம் உடை - எருதை வாகனமாகவுடைய; உமை
அண்ணலை
- உமையவள் கேள்வனாகிய சிவ பெருமானை;  அந்நாள்
உறுசிலை தான்
- அக்காலத்தில் அடைந்த வில்லானது; ஊனம் உளது
-  குறைபாடுடையது; அதன் மெய்ந் நெறிகேள்! - (அதனால் அதனை
முறித்துவிட்டாய்) அந்த வில் வந்த  உண்மையான  வழியை  (இப்போது
உரைக்கிறேன்)  கேள்!  என  உரைப்பான் - என்று  பரசுராமன்  கூறத்
தொடங்கினான்:
   

அரசர்கட்கு.   மானமே அணியாக உடையவர் எனும் பொருளுடைய
“மானாபரணர்”  என ஒரு பெயருள்ளமை கருதி. “மானம்  அணி  முடி
மன்னவன்”என்றார்.  செய்யுளாதலின்   ஓசை   யின்பங்கருதி.  “மானம்
அணி”   என்பது  “மானம்மணி”  என  விரிந்து   வந்தது.   மூன்றாம்
அடியில்  “மானம்  உடை” என்பதும் இவ்வாறே  “மானம்முடை”  என
ஆயிற்று.   பரசுராமன்   பின்வருவதை  முன்   அறியும்   திறம்வல்ல
முனிவன்  ஆக இருந்தும் தனக்குச் சில  விநாடிகளின்  பின்  வரவுள்ள
தீமையையும் அகங்காரத்தால் அறியாதவன்  ஆனான்  என்பார்.  “தான்
அந்நிலையுறுவான்......அது தவிரான்” என்றார்.                    25