பக்கம் எண் :

822பால காண்டம்  

உவந்தனன்   -  விரும்பியெடுத்துக் கொண்டான்; மற்றையொன்றை -
மற்றொரு  வில்லை; நின்று  உலகு அளந்த  நேமி  நெடியமால்  -
(திரிவிக்கிரமனாய்)   உயர்ந்து   நின்று.  உலகங்களைத்  (திருவடியால்)
அளவி்ட்ட  சக்கரப்  படையினை  ஏந்திய  நெடியோனாகிய  திருமால்;
நெறியின்  கொண்டான்  
-  முறைப்படி  தன் கைகளில் கொண்டான்;
என்று இது  உணர்ந்த
- என்ற இச்செய்தியை யறிந்த; விண்ணோர் -
தேவர்கள்; “இரண்டினும்  வன்மை  எய்தும்  வென்றியது  எது” -
“இவ்விரண்டு  விற்களுள்ளும்  வலிமை  பொருந்திய வெற்றி தரும் வில்
எது?”; என்று விரிஞ்சனை வினவ; அந்நாளில் - என்று  பிரமனைக்
கேட்ட அந்த நாளில் (அவன். “அமர்  மூட்டிவிட்டான்”  எனும்   மேற்
கவியோடு முடியும்).  

இடப்பாகமாக     உமையம்மையை    ஏற்றுள்ள   திறம்   நோக்கி.
“உமையாள்  கேள்வன்” எனச் சிவபெருமானைச்  சிறப்பித்தார்.  “ஓங்கி
உலகளந்த  உத்தமன்”  (திருப்பா.  3)  ஆன  சிறப்புப்  பற்றி  “நின்று
உலகு  அளந்த  நேமி நெடியமால்”  என்று  திருமாலைச்  சிறப்பித்தார்.
விரிஞ்சன்: நான்முகன்.                                       27
   

1290.“சீரிது தேவர்தங்கள்
   சிந்தனை” என்பது உன்னி.
வேரி அம் கமலத்தோனும்.
   இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து
   ஒருவர் ஆம் இருவர்தம்மை.
மூரி வெஞ் சிலை மேல் இட்டு.
   மொய் அமர் மூட்டிவிட்டான்;
 

வேரி  அம்கமலத் தோனும் -   நறுமணம்  கொள்ளும்  அழகிய
தாமரை மலரில் வாழும் நான்முகனும்;‘தேவர் தங்கள் சிந்தனை சீரிது’
-  ‘தேவர்களுடைய  (இவ்வாராய்ச்சி)  எண்ணம்   சிறந்தது;   என்பது
உன்னி
-  என்பதை  நினைத்து; இயைவது ஓர் வினயம் தன்னால் -
பொருந்துகின்ற  ஒரு  தந்திரத்தினால்; யாரினும்  உயர்ந்த மூலத்து -
யாரினும்  மேம்பட்ட  காரணநிலையில்;  ஒருவராம்  இருவர்தம்மை -
ஒருவராய்க்  காரிய  நிலையில்   இருவரானவரையும்   (சிவபிரானையும்
திருமாலையும்);  மூரி   வெஞ்சிலை   மேலிட்டு  -  வலிமை  மிக்க
இருவிற்களைக்  காரணமாக  வைத்து; மொய் அமர் மூட்டிவிட்டான் -
வலிய போர் (ஒன்றைப்) புரியுமாறு தூண்டிவிட்டான்.  

கம்பர்     பெருமானின் கடவுட்  கோட்பாடு  தெளிவுற  விளங்கும்
இடங்களில்  இப்பாடல் சிவந்தவற்றுள் சிறந்த ஒன்றாகும்.  ஒரே  மூலப்
பரம்பொருள்.  காரியப்படும்போது.   அளிக்கும்  செயலுக்குத்  திருமால்
எனவும்.  அழிக்கும் செயலுக்குச்  சிவபெருமான்  எனவும்  பெயரளவில்
இரண்டாக  வேறுபடுகிறது.  “மூன்று கவடாய்  முளைத்தெழுந்த மூலம்”
(கம்ப. 3682) என்பதனை இங்குத் தெளிவுபட