பக்கம் எண் :

  பரசுராமப் படலம்823

விளக்கியுள்ள    திறம் காண்க. பரம்பொருள் என்பதனை  “யாரினும்
சிறந்த  மூலம்”  என  அழகுற மொழிப்படுத்தினார்.  “அரன்  அதிகன்.
உலகளந்த  அரி அதிகன் என்று உரைக்கும்  அறிவிலோர்க்குப்  பரகதி
சென்று  அடைதல்  அரிது”  (கம்ப.  4470)  என்பது  கவிஞர்பிரானின்
கருத்தாலின்.    அதனை   உணராது   நான்முகன்    இப்போரினைத்
தொடங்கியது  தக்கது  அன்று  என்பார். “யாரினும்  உயர்ந்த  மூலத்து
ஒருவராம்  இருவர்  தம்மை.  மூரி வெஞ்சிலை  மேலிட்டு  மொய்யமர்
மூட்டிவிட்டான்”  என்றார். “மூட்டுதல் எனும் சொல்  வழக்கு.  இன்றும்
உயர்  வழக்காகாமை  யுணரலாம்.  “பொன் திகழும் மேனிப்   புரிசடை
எம்  புண்ணியனும்.  நின்றுலகம் தாய நெடுமாலும் -  என்றும்  இருவர்
அங்கத்தால்   திரிவரேனும்   ஒருவன்  ஒருவன்  அங்கத்து   என்றும்
உளன்”  தாழ்சடையும்  நீள்  முடியும். ஒண் மழுவும்  சக்கரமும்.  சூழ்
அரவும்  பொன்  நாணும் தோன்றுமால் - சூழும்  திரண்டருவி  பாயும்
திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய்  இசைந்து”   என்னும்
பொய்கையாழ்வார்  (முதல்  திரு.  99.63)  புனித  வாக்குகள்   இங்கு
ஆழ்ந்து   சிந்தித்தற்குரியன.  வேரி  -  மணம்.  மொய்  -   வலிமை.
வினயம் - விரகு. தந்திரம்.                                   28
 

1291.‘இருவரும். இரண்டு வில்லும்
   ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர. திசைகள் பேர.
   வெங் கனல் பொங்க. மேன்மேல்.
செரு மலைகின்ற போழ்தில்.
   திரிபுரம் எரித்த தேவன்.
வரி சிலை இற்றது ஆக.
   மற்றவன் முனிந்து மன்னோ.
 

இருவரும்     - (அரி.  அரன் என்னும்) இரண்டு பேரும்; இரண்டு
வில்லும் ஏற்றினர்  
-  இரு  விற்களையும் நாணேற்றி; உலகம் ஏழும்
வெருவர
-  ஏழுலகங்களும்  அஞ்சுமாறு;  திசைகள்  பேர - திசைகள்
நிலைகுலைய;  வெங்கனல்  பொங்க  -  கடிய  சினத்தீ பொங்கியெழ;
மேன்மேல்
-  மேலும்  மேலும்; செருமலைகின்ற போழ்தில் - போர்
புரிகின்ற; திரிபுரம் எரித்த தேவன் - முப்புரிமெரித்த சிவபெருமானின்;
வரிசிலை  இற்றது  ஆக  
- கட்டமைந்த  வில்  முரிந்துபோக; மற்று.
அவன் முனிந்து
- அச் சிவபிரான் மிக்க சினங்கொண்டு.

மன்.     ஓ - அசைநிலைகள். “முனிந்து மீட்டும் போர் தொடங்கும்
வேலை”  என   மேற்பாடலோடு  இயையும்.  மற்று  -  வினைமாற்றுப்
பொருளில் வந்தது.                                          29
 

1292.‘மீட்டும் போர் தொடங்கும் வேலை.
   விண்ணவர் விலக்க. வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை.
   நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும்.
   கார்முகம் அதனை. பாரில்.