பக்கம் எண் :

828பால காண்டம்  

னாகி;     நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக என்ன -
திருமால்  வலிமையினால்  எடுத்துப்  பயின்ற வெற்றி  வில்லைத்  தருக
என்று   கூற;   கொடுத்தனன்   -  (பரசுராமன்  உடனே  வில்லைக்)
கொடுத்திட்டான்;  வீரன்  கொண்டு  -  வில்லை  (இராமன்) வாங்கிக்
கொண்டவனாய்;  துன்று  இருஞ்சடையோன்  அஞ்ச  -  நெருங்கிப்
பெருத்த   சடையுடையோனாகிய  பரசுராமன்  அஞ்சுமாறு;   தோளுற
வாங்கிச்  சொல்லும்  
- அவ்வில்லைத் தன் தோள்வரையில்  வருமாறு
வளைத்துக் கொண்டு கூறுவான்.

இராமன்   திருமுகம் அழகியது. அது புன்னகை பூக்குங்கால் மேலும்
பேரழகு  பெறும்  என்பார்.  “முறுவல்  எய்தி   நன்றுஒளிர்  முகத்தன்
ஆகி”  என்றார்.  உள்ளிருந்த  வீரம் முகத்தில்  பொங்கியதால்  நன்று
ஒளிர்ந்தது  முகம்.  நகை   எள்ளல்  அடியாகப்  பிறந்தது.   திருமால்
கையாண்ட  வில்  தனக்கு வரவேண்டியதே தருக  என்பார்.  “நாரணன்
வலியின்  ஆண்ட  வென்றிவில்”   என்றார்.  வென்றி வில் -  என்றும்
தோலாத வெற்றியையே யுடைய வில்.                           35
 

1298.‘பூதலத்து அரசை எல்லாம்
   பொன்றுவித்தனை; என்றாலும்.
வேத வித்து ஆய மேலோன்
   மைந்தன் நீ; விரதம் பூண்டாய்;
ஆதலின் கொல்லல் ஆகாது;
   அம்பு இது பிழைப்பது அன்றால்.
யாது இதற்கு இலக்கம் ஆவது?
   இயம்புதி விரைவின்!’ என்றான்.

 

‘பூதலத்து      அரசையெல்லாம்   -    ‘மண்ணுலகத்தையாண்ட
அரசர்களையெல்லாம்;  பொன்றுவித்தனை  நீ   கொன்றாய்   (ஆகவே
நான் உன்னைக் கொல்லலாம்);என்றாலும் வேதவித்து ஆய மேலோன்
மைந்தன்   நீ   
-   ஆனாலும்.   வேதங்களை  அழியாது   காக்கும்
வித்தினைப்   போன்ற  மேலோன்  ஒருவனின்  மகன்   நீ!;   விரதம்
பூண்டாய்   
-  (அன்றியும்)  தவவேடமும்  தரித்துள்ளாய்;  ஆதலின்
கொல்லல் ஆகாது
- ஆகவே. உன்னைக் கொல்லக்கூடாது; அம்பு இது
பிழைப்பது   அன்று  
-  (எனினும்  வில்லில்  நான்  நாண்   ஏற்றித்
தொடுத்துள்ள) இந்த அம்பு தவறுதல் கூடாது; இதற்கு இலக்கு  ஆவது
-  இந்த அம்புக்குக் குறியாகும் பொருள் யாது?; விரைவில்  இயம்புதி’
என்றான்
- காலந் தாழ்த்தாமல் கூறுக’ என்றான் இராமன்.

பூதலத்தைக்     காக்கப்  பிறந்த  அரசையெல்லாம்   நீ  அழிக்கப்
பிறந்தாய்  என்பார்.  “பூதலத்து  அரசையெல்லாம்  பொன்றுவித்தனை”
என்றார்.    ஓரிருவர்   கூடத்   தப்பாமல்    கொன்றமை    தோன்ற.
“அரசையெல்லாம்”  என்றார்.  சத்திரியர்களைக்   கொன்ற   உன்னைச்
சத்திரியனாயுள்ள  நான்  கொல்வது  சத்திரிய   தருமமே;   உன்னைக்
கொல்வது அறமே; ஆயினும் கொல்லவில்லை என்னும்