பக்கம் எண் :

  பரசுராமப் படலம்829

கருத்தை    “என்றாலும்” என்பதில் உள்ள உம்மை குறித்து நின்றது.
கொல்லாமல்  விடுவதற்குக்  காரணங்கள்  இரண்டுள.   வேத  வித்தாய
மேலோன்  மைந்தன்  நீ  என்பது  ஒன்று; தவ   வேடம்    பூண்டது
மற்றொன்று   என்கிறான்   பெருமான்.    உனக்காக   உன்னை  நான்
கொல்லாமல்   விடவில்லை;   உன்   தந்தைக்காகவும்  நீ   பூண்டுள்ள
வேடத்துக்காகவுமே  உன்னை  கொல்லாமல்   விடுகிறேன்  என்கிறான்.
வேடம்  கூடப்  போற்றத்தக்கது  என்பதனை.   “மெய்த்தவ   வேடமே
மெய்ப்பொருள்”   (பெரியபு.  மெய்ப். 15)  என்றமெய்ப்பொருள்நாயனார்
வாழ்வு  உணர்த்தும்.  “மால்  அற  நேயமும்   மலிந்தவர்   வேடமும்.
ஆலயந்தானும்  அரன்   எனத் தொழுமே” (சிவஞா. போ. 12)  என்பார்
மெய்கண்ட தேவரும்.  

இராம     பாணம் தொடங்கிய செயல் முடிக்காது  மீளாது.  வெறும்
வாயோடு  மீளும் வழக்கம் இல்லாதது எனும்  மரபு பற்றி. “ அம்பு இது
பிழைப்பது   அன்று”   என்றார்.   கொலைத்   தொழிலில்   சிறத்தல்
தவமாதல்   இல்லை  யென்க.  “உற்ற  நோய்  நோன்றல்”   உயிர்க்கு
உறுகண்     செய்யாமை    (திருக்.   261)    இரண்டுமே   தவத்தின்
அடையாளங்கள் என்பது வள்ளுவர் வாய்மொழி.                 36

                           அம்புக்குத் தவத்தை இலக்கு ஆக்குதல
 

(வேறு) கலிவிருத்தம்
 
  

1299.‘நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி. வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ?

 

நீதியாய்!   -  நன்னெறி   பூண்டவனே!;  முனிந்திடேல்  -   நீ
வெகுளாதே!;  நீ  இங்கு  யாவர்க்கும் -  நீ  இவ்வுலகில் உள்ளோர்
யாவர்க்கும்;  ஆதி.  யான்  அறிந்தனென் - முதல்வன்  என்பதனை
யான்  (கண்கூடாக)  அறிந்தேன்; அலங்கல்   நேமியாய்;  -   துழாய்
மாலையணிந்த  சக்கரம்  ஏந்திய  திருமாலே; வேதியா! -  வேதியனே!;
வெண்மதிப்  பாதியான்  
-  வெள்ளிய மதியின் பகுதியைச் சூடியுள்ள
சிவபெருமான்;  பிடித்த  வில்  - (முன்பு கையில்) பற்றிய வில்லானது;
இறுவதே அன்றி
- பிளந்து முறிவதேயல்லாமல்;பற்றப் போதுமோ? -
உனது   கையிற்   பிடித்தற்கும்   போதுமோ?  (போதாது)  (என்றான்
பரசுராமன்)  

திருமாலின்     கூறல்லாத எவரும்  இவ்வில்லைப்  பற்றி எடுக்கவும்
கூடுமோ  எனப்  புகழ்ந்தான்  எனினுமாம். இராம  பிரானை  வேதியன்
என்று  பல  இடங்களில்  கம்பர்  பெருமான்   குறிப்பிடுவார்.  “அரசர்
உருக்கொண்டமைந்த  வேதியா!”  (கம்ப.  7625)  எனவும். “நீ  செப்பும்
வேத  நாயகன்”  (கம்ப.  6994)   எனவும்.  “விராவரும்  புவிக்கெலாம்
வேதமே யன இராமன்” (கம்ப. 1453) எனவும் வருவன காண்க.      37
   

1300.‘பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியான் ஆதல் மெய்ம்மையால்;